Thursday, April 30, 2015
01/01/2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதிவி உயர்வு - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு
CLICK HERE - BT TO PG PANEL (ZOOLOGY) AS ON 01/01/2015
CLICK HERE - BT TO PG PANEL (CHEMISTRY) AS ON 01/01/2015
CLICK HERE - BT TO PG PANEL (BOTANY) AS ON 01/01/2015
CLICK HERE - BT TO PG PANEL (PHYSICS) AS ON 01/01/2015
CLICK HERE - BT TO PG PANEL (MATHS) AS ON 01/01/2015
CLICK HERE - BT TO PG PANEL (ENGLISH SM) AS ON 01/01/2015
CLICK HERE - BT TO PG PANEL (ENGLISH CM) AS ON 01/01/2015
CLICK HERE - BT TO PG PANEL (TAMIL) AS ON 01/01/2015
Tamilnadu Aavin Jobs 2015
Kancheepuram and Thiruvallur district Aavin Jobs application form Download
Tamilnadu Co-operative Milk Producers' Federation Ltd, Recruitment 2015 for manager jobs in Kancheepuram and Thiruvallur district
தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு
Applications are invited for Tamilnadu Co-operative Milk Producers' Federation Ltd Aavin Dairy cum Powder Plant Thiruvannamali through direct recruitment process
Name of the Post : Manager (Accounts) - 1 Posts
Basic Pay : 9300 Grade Pay 4400 in Pay Band II
டி.என்.பி.சி. குரூப்- 2 தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள 1241 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆய்வக உதவியாளர் பணி - நோடல் மையத்தை திருத்தணி பகுதியில் கூடுதலாக துவக்க வேண்டுகோள்
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவதற்கான நோடல் (சேவை) மையத்தை, திருத்தணி பகுதியில் கூடுதலாக துவக்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளில் உரிய காரணமின்றி விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விவரத்தை, கல்வி அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 20 துவங்கி 25ல் முடிக்க தேர்வுத் துறை அறிவுறுத்தியது. ஆனால் மதுரையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்பட்டு ஏப்.29 வரை திருத்தும் பணி நீடித்தது.
ஏ, பி கிரேடு கல்லூரிகளில் படிப்பவருக்கு மட்டுமே கல்விக் கடன் இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது
கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் (NAAC) ஏ, பி கிரேடு சான்றுஅளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன்வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது இந்த ஆண்டே அமலுக்கு வரவுள்ளது.நாடு முழுவதும் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 54 லட்சம் பேர் கல்விக் கடன் பெற்றுள்ளனர்.
3 முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாகபணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவு எப்போது?
தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவுகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன.
லேப்-டெக்னீஷியன் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 676 டேப்-டெக்னீஷியன் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் எஸ்.மணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டில் சேர விண்ணப்பங்கள் :மே 4 முதல் விநியோகம் தொடக்கம்
தமிழகத்தில் 41 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
வேலை வேண்டுமா?- பாரத ஸ்டேட் வங்கிக்குத் தேவை 2,000 அதிகாரிகள்
வங்கிப்பணியில் சேர்வதற்காக நீண்டகாலம் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2,000 அதிகாரி பணியிடங்களை (Probationary Officer) நேரடியாக நிரப்ப உள்ளது.
வேளாண் கல்லூரிகளில் சேர மே 15 முதல் விண்ணப்பம் வினியோகம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 15ம் தேதி முதல் இணையதளம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.உறுப்பு கல்லூரியில் 1,220 இடங்கள், இணைப்பு கல்லூரியில் 1,080 இடங்கள் என மொத்தம் 2,300 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில், 50% இடங்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தாலும், 50 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்பப்படுகிறது. இப்பாடத்தில் மேல்நிலைப்பள்ளி கல்வி அல்லது அதற்கு இணையான கல்வி பிரிவில் பொது கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தில் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். 13 பட்டப்படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது.
பொறியியல் படிப்பில் சேரஎன்னென்ன சான்றிதழ்கள் தேவை?
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
பல்கலையில் 'ஆன்-லைன்' விண்ணப்பம்
காந்திகிராமம்:காந்திகிராம பல்கலையில் 2015--16 கல்வியாண்டிற்கு 'ஆன்-லைனில்' விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தமுறையை பல்கலையில் துணைவேந்தர் நடராஜன் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
Wednesday, April 29, 2015
பள்ளி ஆய்வக உதவியாளர் பணி - விண்ணப்பிக்கக் கடைசி தேதி மே 6
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு கடந்த 4 நாள்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்களது விண்ணப்பங்களை இணைய வழியில் (ஆன்-லைன்) பதிவு செய்துள்ளனர்.
ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா?: பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்
ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
பிரச்சினை எங்கேயிருக்கிறது
நூறாண்டு கடந்துவிட்ட அரசு உதவி பெறும் பள்ளி அது. பத்து வருடங்களுக்கு முன்பு வரையில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு ஆயிரத்து சொச்சம் மாணவர்கள் கூட இல்லை. சில பல ஏக்கர்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன. மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அப்படியேதான் இருக்கிறது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கூட அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து விட்டது.
"ஒரு துவக்கப்பள்ளியின் முடிவு'
1990 காலகட்டங்களில் உலக வங்கியின் நிர்பந்தத்தால் புதிய பொருளாதாரக் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியதால், கல்வியில் தனியார்மயம் அனுமதிக்கப்பட்டு பின்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதன்விளைவு, தனியார் முதலாளிகளும், நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பள்ளி, கல்லூரிகளைத் துவங்கினர்.
ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலாளர் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
அரசுப் பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்களால் முடியும்!
இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.
அரசுப் பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட ஆயிரம் பேர் குறைவு
விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் ஆயிரம் பேர் குறைந்துள்ளனர்.
Tuesday, April 28, 2015
30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம் !!!
இதாம்மா ஃபாஸ்ட் ஃபுட்
தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை. பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது.
ஆய்வக உதவியாளர் தேர்வு: முழு தகவல்கள்
Tamil Nadu TNDGE Lab Assistant Exam 2015 Full Details
TNDGE - Tamil Nadu Directorate of government examination invites application for the post of School Lab assistant throughout tamil nadu. The total number of Vacancy is 4360 Posts. The Detailed notification, eligibility, syllabus, exam pattern, selection procedure will be published soon in Tndge website.
4360 Lab Assistant Exam District vise Registration School ( Nodel centre)
Tamil Nadu School Lab Assistant List of Nodal Centers / Application Center
Ø Ariyalur -
Male:
Government Higher Secondary School (Ariyalur)
Periyar Higher Secondary School (Jayamkondan).
Female:
Nirmala Higher Secondary School (Ariyalur)
Government Higher Secondary School (Jayamkondan)
மாணவர்களுக்கு 'ஆதார்'
சென்னையில், 6 முதல் 18 வயது வரை உள்ள, மாணவர் களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்
கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அச்சுப்பிழை வினாக்களுக்கு விடை? முயற்சித்தோருக்கு மதிப்பெண்!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால், மதிப்பெண் வழங்க, அறிவுறுத்தப்பட்டுவிட்டதாக, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.
வெளிநாட்டில் பணிக்குச் செல்லும் நர்சுகள் உடனடியாக பெயர் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மத்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகாரத்துறை அமைச்சகத்தின் 8–4–15 தேதியிட்ட ஆணையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களான தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
விளையாட்டு விடுதிகளுக்கு மே 2 ல் மாணவர்கள் தேர்வு
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இங்கு வரும் கல்வியாண்டில் 7,8,9,11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், குத்துசண்டை விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
Monday, April 27, 2015
'மொபைல் ஆப்ஸ்'களில் 'போலி'கள் ஏராளம்! 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை
போலியான 'மொபைல் ஆப்ஸ்' காரணமாக, 'ஆன்லைன்' மூலம் பரிவர்த்தனை செய்பவர்கள், பணம் இழப்பது அதிகரித்துள்ளது. 'எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பணம் பறிபோய்விடும்' என்று 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கின்றனர்.
ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? :தேர்வுகள் துறை இணையதளத்தில் தகவல்
அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு, மத்திய அரசின், 'ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான்' திட்டத்தில், 4,362 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான எழுத்துத் தேர்வு மே 31ம் தேதி நடக்கிறது.
கல்விக்கு பயன்படும் பழைய பொருள்கள்!
உபயோகமற்ற பழைய பொருள்களை பொதுமக்களிடமிருந்து சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை கல்விக்காக அளித்து வருகின்றனர் "பேப்பர் மேன்' எனும் தன்னார்வ அமைப்பினர். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள், காகிதங்கள், மின்னணுப் பொருள்களைப் பயன்படுத்திய பிறகு ஒரு சிலர் பழைய பொருள்களை வாங்கும் கடைக்காரரிடம் கொடுத்து விடுகின்றனர். பலர் குப்பைத் தொட்டியில் போட்டு விடுகின்றனர்.
மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்
பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான, மத்திய அரசின் புதிய மருத்துவத் திட்டம், தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக, 770 மருத்துவக் குழுக்கள் அங்கன்வாடி குழந்தைகளை பரிசோதித்து வருகின்றன.
70 பிரிவுகளில் இணையத்தில் முதுநிலை கல்வி வாய்ப்பு
மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ. 140 கோடி நிதியின் மூலம் 70 முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கு யுஜிசி பாடத் திட்டம் தயாரித்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் இணையத்தில் அனைவரும் முதுகலைக் கல்வி பயிலும் சூழல் உருவாகியுள்ளதாகவும் புது தில்லி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் தெரிவித்தார்.
Sunday, April 26, 2015
நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ள..!
பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு.
எண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களது குணநலன்கள், அவர்களுக்கான பலாபலன்கள், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகார வழிபாடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது.
ஜீன்ஸ் அணிய தடை; மொபைல் 'நோ!': பள்ளி ஆசிரியர், ஆசிரியை, மாணவர்களுக்கு வருகிறது புது கட்டுப்பாடு
வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியலை, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்
வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்குள், தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்ய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (ஈ.பி.எப்.ஓ.,) முடிவு செய்துள்ளது.
சத்தம் இல்லாமல் அரசு துறையில் புது வசதி அறிமுகம்: அனைத்து அனுமதியும் இணைய வழியில் தான்: 2 மாதத்தில் 2,700 விண்ணப்பம்; 500க்கு அனுமதி
அனைத்து அனுமதிகளையும், இணைய தளம் வழியாக வழங்க, புதிய மென்பொருள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், சத்தமின்றி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இரண்டு மாதங்களில், 2,700 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
வீட்டுக் கடனுக்கு ஒரு நல்ல செய்தி
வீட்டுக் கடன் குறித்த செய்திகள் பத்திரிணகைகளில் மீண்டும் வலம்வரத் தொடங்கி யிருக்கின்றன. இம்முறை அதன் வட்டி விகிதக் குறைப்பு கவனப்பட வைக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி வட்டிக் குறைப்பு விகிதத்தில் அடிப்படைப் புள்ளிகளில் 25 புள்ளிகள் குறைத்து முன்னிலை வகிக்கிறது. இந்தத் திட்டம் ஏப்ரல் 13, 2015 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதனால் குறைந்தபட்ச வட்டி விகிதம் 9.9 சதவிகிதமாக இருக்கும். பெண் வீட்டுக் கடனாளிகளுக்கு மேலும் 0.5 குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான வட்டி விகிதம் 9.85 சதவிகிதமாகும்.
முதுநிலை கல்வியை தமிழில் படிக்காதவர் தமிழ் வழிக்கல்வி சலுகை பெற முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
முதுநிலை கல்வியை தமிழில் படிக்காதவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மருத்துவப் படிப்புகளுக்கு மே 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒரு பல்மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பம் பெறலாம்.
பி.இ. கலந்தாய்வு: மே 6 முதல் விண்ணப்ப விநியோகம் அண்ணா பல்கலை. அறிவிப்பு
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.
கொத்து கொத்தாக போலி வாக்காளர்கள்: பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி - தேர்தல் கமிஷன் கடிதம்
வாக்காளர் பட்டியலில் போலிகள் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.
Saturday, April 25, 2015
ஆய்வக உதவியாளர் பாடத்திட்டம்
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு பாடத்திட்டம்
Syllabus and Pattern for Tamil Nadu School Lab Assistant Jobs:
1. Science (SSLC Standard Level)
2. General Knowledge
TNDGE Tamil Nadu School Lab Assistant Exam Pattern:
Science = 120 Questions
General Knowledge = 30 Questions
Total = 150 Questions
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்
( அசல் மற்றும் நகல்கள் )
(*கட்டாயம் தேவைப்படுவன)
1) *பத்தாம் வகுப்பு சான்றிதழ் / கூடுதல் கல்வித்தகுதி சான்றிதழ்
2) *சாதி சான்றிதழ்
3) *வேலைவாய்ப்பு அட்டை ( employment card)
4) முன்னுரிமை கோரினால் அதற்கானச் சான்றிதழ்
5) உயர்கல்விக்கான சான்றிதழ்
தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
'முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ் வழியில்படித்திருந்தால் மட்டுமே அரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
மதுரை புதூர் ஸ்டீபன் ராஜா. இவர் பி.ஏ.,(பொருளாதாரம்), பி.எட்., தமிழ்
வழியிலும்; எம்.ஏ.,(பொருளாதாரம்) ஆங்கிலத்திலும் படித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2013-14, 2014-15 ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு நடந்தது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரி ஸ்டீபன் ராஜா விண்ணப்பித்தார். டி.ஆர்.பி., தலைவர் அதை நிராகரித்தார். ரத்து செய்யக்கோரிஉயர்நீதிமன்றத்தில் ஸ்டீபன் ராஜா மனு செய்தார். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். ஸ்டீபன் ராஜா மேல்முறையீட்டில், 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு உண்டு. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம்உத்தரவு:
மதுரை புதூர் ஸ்டீபன் ராஜா. இவர் பி.ஏ.,(பொருளாதாரம்), பி.எட்., தமிழ்
வழியிலும்; எம்.ஏ.,(பொருளாதாரம்) ஆங்கிலத்திலும் படித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2013-14, 2014-15 ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு நடந்தது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரி ஸ்டீபன் ராஜா விண்ணப்பித்தார். டி.ஆர்.பி., தலைவர் அதை நிராகரித்தார். ரத்து செய்யக்கோரிஉயர்நீதிமன்றத்தில் ஸ்டீபன் ராஜா மனு செய்தார். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். ஸ்டீபன் ராஜா மேல்முறையீட்டில், 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு உண்டு. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம்உத்தரவு:
மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் இணையதள மதிப்பெண் நகலை பெறலாம்!
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை யில் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா கூறியிருப்பதாவது:
பி.இ 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகம்!!
பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில், மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஜூன் இறுதியில் கலந்தாய்வு: நிகழ் கல்வியாண்டில் (2015-16) பி.இ. கலந்தாய்வு ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற உள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது:- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள், மே மாதம் 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஜூன் இறுதியில் கலந்தாய்வு: நிகழ் கல்வியாண்டில் (2015-16) பி.இ. கலந்தாய்வு ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற உள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது:- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள், மே மாதம் 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
Friday, April 24, 2015
7th Pay Commission Team to visit North-eastern states
7th Pay Commission has proposed to visit North-eastern states between 7th to 15th May 2015.
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்!!
காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அடிப்படைஊதியம் விகிதம் : 5,200- 20,200 ..
தர ஊதியம் - 2400.
தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அடிப்படைஊதியம் விகிதம் : 5,200- 20,200 ..
தர ஊதியம் - 2400.
தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்!
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் வழங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
இனி ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு போன் செய்யலாம்
பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கம்ப்யூட்டர் காலத்தில் மக்களால் ஃபேஸ்புக் இல்லாமல் இருக்க முடியவில்லை. யாரையாவது சந்தித்தால் செல்போன் நம்பர், முகவரி கேட்பதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது நிலைமை. ஃபேஸ்புக் மூலம் தான் பலர் நண்பர்களோடு தொடர்பில் உள்ளனர்.
கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை 25ம்.தேதி மாற்றிக்கொள்ளலாம்
பழைய, கிழிந்த மற்றும் அழுக்கான, குறிப்பாக சிறிய மதிப்பிலக்க 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்றி, அவற்றுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழங்கப்படவுள்ளது.
4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமனம்: போட்டித் தேர்வுக்குஇன்று முதல் விண்ணப்பிக்கலாம் - நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரம்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது.
மே 7ல் பிளஸ் 2; மே 21ல் 10ம் வகுப்பு:தேர்வு முடிவுதேதி அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி ெவளியிடப்படும்' என, தமிழகஅரசு அறிவித்துள்ளது.
மே முதல் வாரத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்
பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி (மே 7) அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் குறித்த நடைமுறைகள் தீவிரமாகியுள்ளன.
கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களை வற்புறுத்தக் கூடாது
தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின, மதம் மாறிய தலித் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என சுயநிதி பொறியியல்கல்லூரிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்
Tamil Nadu District Wise
Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208
Coimbatore – 105
Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208
Coimbatore – 105
Thursday, April 23, 2015
அகவிலைப்படி உயர்வு அறிவித்த "மக்கள் முதல்வரின்" வழிகாட்டுதல்படி செயல்படும் தமிழக அரசுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நன்றி

இதுகுறித்து அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - யின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 6 சதவீத அகவிலைப் படியை உயர்த்தி வழங்கியுள்ளது. இதையொட்டி "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பிலும் ஆசிரியர் சமுதாயம் சார்பிலும் "மக்களின் முதல்வர் " புரட்சித் தலைவி "அம்மா" அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் .
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அடிப்படைஊதியம் விகிதம் : 5,200- 20,200 ..
தர ஊதியம் - 2400.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?
சென்னை தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் எழுத்து தேர்வு - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களில் 4360 பேரை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.
தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு
தொகுப்பூதியம் பெறுவோருக்கு, தனிப்பட்ட தொகையாக, மாதத்திற்கு 20 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அரசு அலுவலர்களுக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, தனிப்பட்ட தொகையை உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதியர்கள் வருமான வரி பிடித்தம் தகுதியுள்ள கழித்தல்களுக்கான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசு விளக்கம்
'ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்து, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, ஓய்வூதியர்கள் தகுதியுள்ள கழித்தல்களுக்கான விவரங்களை தெரிவிக்கலாம்' என, அரசு அறிவித்துள்ளது.
பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!
போலி சான்றிதழ்களை தடுக்க, பிறப்பு, இறப்பு பதிவுக்கும், 'ஆதார் எண்' அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, ஜன., 1ம் தேதி முதல், நாடு முழுவதும், பிறப்பு, இறப்புகள் அனைத்தும், 'ஆன்லைனில்' பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, மத்திய சுகாதாரத் துறை, 'சிவில் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் சாப்ட்வேர்' தயாரித்துள்ளது.
தமிழக அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி
சென்னையில் உள்ள தமிழக அறிவியல் மையத்தில், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஒரு நாள் அறிவியல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கல்வித்துறை உத்தரவு: பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் உள்பட 8 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிப்பறையைச் சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்தியதாக பள்ளி நிர்வாகி, ஆசிரியர்- ஆசிரியைகள் என 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, 8 பேரை புதன்கிழமை கைது செய்தனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார்
''நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழியை, விருப்ப படமாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
Wednesday, April 22, 2015
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சென்னை : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
FLASH NEWS:-6%D.A.Announced!!!
FLASH NEWS
>Hon'ble CM Announced 6% DA for TN Govt Employees &TRs
>Monetary benefit effect from 01.01.15
>DA raised from 107% to 113%
>DA Arrear 4 months from Jan to April.
>Hon'ble CM Announced 6% DA for TN Govt Employees &TRs
>Monetary benefit effect from 01.01.15
>DA raised from 107% to 113%
>DA Arrear 4 months from Jan to April.
'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!
கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி, செய்தித்தாள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று எதை எடுத்தாலும், 'ஆசிரியை மாணவனோடு ஓட்டம்' என்ற செய்திதான் முன் வந்து நிற்கிறது. இந்த செய்தியை படித்தவர்கள், ஷேர் செய்கிறார்கள். ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது கூட அதிகம் விவாதித்தது, ஆசிரியை மாணவனோடு ஓட்டம் என்ற செய்தியைத்தான். இந்நிலையில், வெறும் மீடியா பசிக்காக சமூகத்தை சீரழிக்காதீர்கள் என்று குரல் கொடுக்கிறார்கள் கல்வியாளர்கள்.
கோப்புகள் தயார் : விரைவில் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வானது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் : 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது.
பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வருகிற 24-ம் தேதி முதல், தொடர்ந்து மே 6-ம் தேதி வரையில் வரவேற்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளஉயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை தலைமைச்செயலகத்தில் சந்தித்துபேசினார்கள். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் உறுதி சத்துணவு ஊழியர்களின் கோாிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்
சத்துணவு ஊழியர்களின் கோாிக்கைகள் அனைத்தும் படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும் என்று தலைமை செயலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அமைச்சா் வளா்மதி, சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார்.
வேலைநிறுத்தம் வாபஸ் ஏன்? சத்துணவு ஊழியர்கள் விளக்கம்
கடந்த ஒரு வாரமாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றது ஏன் என சத்துணவு ஊழியர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர். தலைமைச் செயலகத்தில் சமூகநலன்- சத்துணவு திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதியைச் சந்தித்த பிறகு அவர்கள் இந்த விளக்கத்தைத் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை
அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப். 23) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஏப்ரல் 23 முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்
பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதால், எந்த விடை எழுதி இருந்தாலும் அதற்கு மதிப்பெண் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்1 தேர்வு முடிவு வரும் முன்பு பிளஸ் 2 தொடக்கம் அரசு பள்ளிகளிலும் கோடை சிறப்பு வகுப்புகள்
பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பே பிளஸ்2 மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முதியோர் உதவிக்கான விதிகளை தளர்த்தியது அரசு: வாரிசு இருந்தாலும் உதவி கிடைக்கும்
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கான மாதாந்திர உதவி பெறுவதற்காக, விதிமுறைகளை, தமிழக அரசு தளர்த்தி உள்ளது. வருமான வரம்பு, 5,000 ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தாலும் பயன் பெறலாம். வாரிசுகள் இருந்தாலும், ஆதரவில்லை என்றால், தாராளமாக முதியோர் உதவி கிடைக்கும்.
உதவித்தொகை:
அலைபேசி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்: இன்று முதல் நாடு முழுவதும் அறிமுகம்
முன்பதிவு செய்யாமல், சாதாரண டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க, பேப்பர் இல்லாத டிக்கெட் முறை, இன்று முதல் அறிமுகமாகிறது. சாதாரணமாக, ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்ய, ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுன்டர்களில் வரிசையில் நின்று, டிக்கெட் பெற வேண்டும். இன்று முதல், டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்க தேவையில்லை.
Tuesday, April 21, 2015
உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் வழக்குகள் இறுதிவிசாரணை வரும் ஜூலை 14 தேதிக்கு ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுத்தேர்வு பணிநியமனங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் முறைக்கு எதிராக லாவன்யா மற்றும் பலர் தொடர்ந்தனர்.
ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.
1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.முகவரி:The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in
அட்சய திரிதியையில் என்ன வாங்க வேண்டும்?
இன்று 21/05/2015 அட்சய திரிதியை
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.
சயம் என்றால் தேய்தல் என்று பொருள்.
அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.
சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.
ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் அதிகாரி பணிகள்
ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்து தேர்வு நடத்தி இந்த பணியிடங்கள் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
நடுநிலைப்பள்ளி மாணவர்களின் விடைத்தாள் வட்டாரங்கள் அளவில் மாற்றப்பட்டு மதிப்பீடு: புதிய திட்டம் நிறுத்தம்!
நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறியும் வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய நடைமுறை, முதன்முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம், முழுமை பெறாமலேயே, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
வழக்குகள் அதிகரிப்பு எதிரொலி: ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க டிஆர்பி முடிவு!
போலி சான்றிதழ், இன வாரியான முன்னுரிமை வழங்குதல், தகுதி நிர்ணய குழப்பம் ஆகியவற்றால் கல்வித்துறையில் புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்த நாளில் இருந்தே ஆசிரியர் தேர்வு வாரியம் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு
சென்னையில் 10-வது வகுப்பு, பிளஸ்-2 பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் அறிவுரை வழங்கி வருகிறார்கள். பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.
பரீட்சையில் தோல்வியா? கவலையை விடுங்கள்.. வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!
பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் மன நெருக்கடிக்கு உள்ளாகி, நிம்மதியை இழக்கிற காலகட்டம் இது! விதைத்து பயிர் வளர்த்த விவசாயிகள் அறுவடைக்கு காத்திருப்பது போன்று, பரீட்சை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்கு காத்திருக்கிறார்கள்.
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 அரசு பள்ளி ஆசிரியர்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது
செய்தி பகிர்வு தே .தாமஸ் ஆண்டனி ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நாதகவுண்டன் பாளையம் ,மொடக்குறிச்சி ஒன்றியம் .
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 அரசு பள்ளி ஆசிரியர்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது .இவர்களது கற்பித்தல் முறைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் ,மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது .அரசு பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்யாசபடுத்தவும் ,ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் ,பள்ளிக் கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது .
9ம் வகுப்பில் இனி `ஆல்பாஸ்’ கிடையாது
ஒன்பதாம் வகுப்பு வரை நூறு சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை ரத்து செய்து விட்டு, தேர்ச்சி விகிதத்தை குறைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரையும் 9ம் வகுப்பு வரை ‘பெயில்’ ஆக்க கூடாது என அரசு உத்தரவு உள்ளது.
மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க ஏற்பாடு
தேர்வு முடிவு வெளியிடப்படும் காலகட்டத்தில் மாணவர்கள் தற்கொலைகளில் ஈடுபடுவதைக் தடுக்க, சென்னை பெருநகர காவல்துறை பிளஸ் 2,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது.
1175 புதிய வகுப்பறைகள் ஜூனில் திறப்பு: எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் தகவல்
"தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1175 கூடுதல் வகுப்பறைகளை ஜூனில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார்.
சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ்
தமிழகம் முழுவதும், சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற போராட்டம், நேற்று இரவு, வாபஸ் பெறப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 15ம் தேதி முதல், காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்தனர்.
புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை: மத்திய கல்வியியல் கவுன்சில் கடும் எச்சரிக்கை
'தமிழகத்தில், புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை' என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது.
30க்குள் முடிக்க திட்டம்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. இம்மாதம் 30ம் தேதிக்குள் திருத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது.
தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் புதிய பிஎட் கல்லூரிகள் தொடங்க விதிமுறைகள் கடுமையாக்கப்படும்
தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக பிஎட் கல்லூரிகள் இருப்பதால், இனி புது கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். மேலும், அவசியம் மற்றும் தேவை இருந்தால் மட்டுமே புதுக் கல்லூரிகளுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்படும் என்று ஆசிரியர் கல்விக் குழு தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.
மே முதல் வாரத்தில் வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளதையடுத்து மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் கல்வி ஆண்டிலிருந்து இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்பு
பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் நோட்டீஸ்
'உதவித் தொகை பெறும் மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
Monday, April 20, 2015
அரசு ஊழியர், ஆசிரியர்கள் அசையும் சொத்து, அசையா சொத்து வாங்க அனுமதி கோரும்போது கவனிக்க வேண்டிய வை
ஆணயர்(கா.ப) ந.க. எண் :82801/எம்.3/2004-2. தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதி:1973, சார்விதி:2. அசையும் சொத்து -----------------------------(1) ரூபாய் 15000/ க்கு மேல் அசையும் சொத்து வாங்கினாலோ, விற்பனை செய்தாலோ, நிர்னயிக்கப்பட்ட அதிகாரிக்கு (controling officer )
ஒருமாதத்திற்குள் உரிய நிதி ஆதாரம், சொத்து விபரங்களுடன் தெரிவித்தால் போதுமானது .
உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்!!!
ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முண்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நில்லையில் இவ்வழக்கு நாளை 21,04.2015 அன்று கோர்ட்ட் எண் 7ல் 5வது வழக்காக இறுதி விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பும் ஆஜாராக டெல்லி விரைந்துள்ளனர்....
செல்போன் தொலைந்து விட்டதா? கவலைப்படாதீர்கள் இனி கூகுளில் போனை தேடிக்கண்டுபிடிக்கலாம்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும். கூகுள் நிறுவனம் மிகத்திறமை வாய்ந்த தேடுபொறி தளத்துடன், தொழில்நுட்ப உலகில் களம் இறங்கியது. அதன்பிறகு படங்கள், வரைபடம், செய்திகள், மொழி பெயர்ப்பு என எண்ணற்ற வசதிகளை தந்து இணைய உலகில் ஜாம்பவானாக விளங்கி வருகிறது. தற்போது ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்': ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
12 அம்ச கோரிக்கைகளை ஏற்று விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தும் சத்துணவு ஊழியர் போராட்டம் தேவையற்றது - சங்கத்தலைவர்
12 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்று கொண்ட பின் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது,” என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.
தலைமை ஆசிரியர் காலியிடம்விரைவில் நிரப்ப திட்டம்
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ரயிலில் மொபைலை காணவில்லையா? விரைவில் வருகிறது இன்சூரன்ஸ் திட்டம்
ஆன் - லைன் மூலம் ரயில் டிக்கெட்டு, 'புக்' செய்வோருக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல புதிய சலுகைகளை, ஐ.ஆர்.சி.டி.சி., அளிக்கஉள்ளது.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:
நர்சு பணிக்கு 7,000 பேர் தேர்வு:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனைகளுக்கு, கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில், புதிதாக, 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, தகுதித் தேர்வு, ஜூன் மாதம் நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுமே 7ல் வெளியாகிறது?
'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது.
பி.எட்., படிப்புக்கு தேர்வு தேதி அறிவிப்பு
பி.எட்., படிப்புக்கான தேர்வுகள், மே 8ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடக்கின்றன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:மே 8ம் தேதி - இந்திய சமூகத்தில் கல்வி; 9ம் தேதி - கற்றல் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி, 11ம் தேதி - கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாடு, 12ம் தேதி - விருப்ப பாடங்கள், 13, 14ம் தேதிகளில் மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும்.
ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் பதிவுபோலியை ஒழிக்க நடவடிக்கை
ரேஷன் கார்டுகளில், ஆதார் எண் இணைக்கும் பணி துவங்க இருப்பதால், தேவையற்ற பெயர்களை நீக்க வேண்டும். இரு வேறு இடங்களில் ஒரே பெயர் இருந்தால், இரண்டு கார்டுகளும் ரத்தாகும்,' என, குடிமைப்பொருள் வழங்கல்துறை எச்சரித்துள்ளது.
Sunday, April 19, 2015
வில்லங்கமற்ற வீட்டை வாங்குங்கள்!
TET இறுதிவிசாரணை!!!
TET இறுதிவிசாரணை உச்சநீதிமன்றத்தில்,கோர்ட் எண் 7, வழக்கு எண் 5வது இடம்பெற்றுள்ளது.
மாணவர்களுக்கான இணைய தளங்கள்!
பொதுத்தளங்கள்
+2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
+2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் முதல் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -பள்ளி கல்வி இயக்குனர்
'திறன் மேம்பாட்டுக்காக மாநிலம் தோறும் தனி பல்கலை'
''திறன் மேம்பாட்டுக்காக, அனைத்து மாநிலங்களிலும், தலா ஒரு பிரத்யேக பல்கலை உருவாக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், மத்திய திறன் மேம்பாட்டுக் கழகம், இதற்கு அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து, ஒரு லட்சம் பேருக்கு, மருத்துவம் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உள்ளது.
ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுதனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்.
மே மாதத்தில் நடக்கும் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில், பங்கேற்க விரும்பும்தனித்தேர்வர்கள், ஏப்ரல், 22ம் தேதிக்குள், உத்தமசோழபுரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து வழக்கு
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கான முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு, பள்ளிக் கல்விச் செயலர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பல வங்கிகளில் கணக்குகள் வைத்திருந்தால் தெரிவிப்பது கட்டாயம்: வெளிநாட்டு பயண விவரமும் தர வரிகள் வாரியம் உத்தரவு!
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்க, பல நடவடிக்கைகளை எடுத்துள்ள மத்திய அரசு, உள்நாட்டில் கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும், வியூகங்களை வகுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக, 'ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போர், பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவை குறித்த விவரங்களை வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும். இது, கட்டாயம்' என, மத்திய நேர்முக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அறிவிப்பு
குரூப் 4 தேர்வு முடிவுகள், அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
கணக்கு வைத்திருக்கும் வங்கி மட்டுமின்றி எந்த வங்கி ஏடிஎம்மிலும் டெபாசிட்
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செய்யும் வசதி உள்ளது.பெரும்பாலான வங்கிகள் இந்த வசதியை அறிமுகப்படுத்தி விட்டன. இருப்பினும், எண்ணிக்கையில் இவை குறைவு. இதனால், பணம் டெபாசிட் செய்ய வங்கிக்கு செல்லவேண்டிய அவசியம் இன்னமும் உள்ளது. பணத்தை டெபிட்கார்டு பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்மிலும் எடுக்கலாம்.
Saturday, April 18, 2015
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது...
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக
அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு வந்தவர்களுக்குப் பொன்னான நேரம்!!!
கோடையில் பழங்களை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?
மொபைல் டேட்டாவை தெரிந்து கொள்வோம் !
நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
➖➖➖➖➖
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.
இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
➖➖➖➖➖
பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் ஏற்பாடுகள் தீவிரம் : ஆய்வுக்கூட்டத்தில் முடிவு
அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச பொருட்களை வழங்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக அரங்கில் நேற்று நடந்தது.
பள்ளி திறக்கும் நாளிலே இலவச பஸ் பாஸ்
கோடைவிடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான ஜூன் 1 அன்றே அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
'டான்செட்' விண்ணப்பிக்க ஏப்.25, வரை கால நீட்டிப்பு
'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 25 ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உடனுக்குடன், 'ஹால்டிக்கெட்' பெற்றுச்செல்ல அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Friday, April 17, 2015
சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமிழக அரசு அறிக்கை
பல்வேறு சலுகைகளைப்பெற்ற பின்னரும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் செய்வது தேவையற்றது என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை குறித்தும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
12ம் வகுப்பு படித்தாயிற்று.... அடுத்து? -பேராசிரியர் பாலா வி. பாலசந்தர்.
12ம் வகுப்பு படித்தாயிற்று.... அடுத்து? என்ற கேள்விக்கு நம்முடைய மாணவ, மாணவிகளுக்கு அதிக சாய்ஸ்கள்கூட யோசிக்க தெரிவதில்லை. எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., பி.ஏ., என பாரம்பரிய படிப்புகளை மட்டுமே இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்கிற பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று: அமைச்சர்கள் வாழ்த்து
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மாநிலத்திலேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. 9001:2008 தரச்சான்று பெற்றுள்ளதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் ஆகியோர் கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இது சமமான கல்வியா? சுசித்ரா..
இனி பள்ளிக்குச் செல்லும்போது முதுகில் கூன் விழும்படியாகப் புத்தகப் பொதி மூட்டையைத் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை. பரிட்சையோ, மதிப்பெண்களோ நீங்கள் யார் என்பதைத் தீர்மானிக்காது. அறிவியல், கணிதப் பாடங்கள் படிப்பதும் ஆடி, பாடி, விளையாடுவதும் ஒரே அளவுகோலில் பார்க்கப்படும்.
ஆங்கிலத்தில் பேச தடுமாறும் பி.எட்., கல்லூரி மாணவர்கள்: கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி தர திட்டம்
தமிழக பி.எட்., கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவதால், கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், அரசு, அரசு உதவிபெறும், சிறுபான்மை மற்றும் தனியார் சுயநிதி கல்வியல் கல்லூரிகள் என, 658 கல்லூரிகள் செயல்படுகின்றன.
19 பட்ட படிப்புகளுக்கு விருப்ப பாடத்தேர்வு முறை
தொழிற்கல்வி சார்ந்த விருப்ப பாடத்தேர்வு முறையில், கலை, அறிவியல் கல்லுாரிகளில், 19 பாடங்களை அறிமுகம் செய்ய, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்பட்டு உள்ளன.மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை, தாங்களே தேர்வு செய்யும் விருப்பப் பாடத்தேர்வு முறை, பல பல்கலைகளில் அறிமுகமாகி உள்ளது.
ஜூலையில் பொறியியல் கலந்தாய்வு
''அண்ணா பல்கலையுடன் இணைந்த, பொறியியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே மாதம் வழங்கப்படும்; ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்து உள்ளார்.
'நெட்' தகுதித்தேர்வு:ஜூன் 28ல் நடக்கிறது
கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர் பணிக்கான, தேசிய அளவிலான, 'நெட்' தகுதித்தேர்வு, ஜூன் 28ம் தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று துவங்கியது.
Thursday, April 16, 2015
கையால் எழுதி மேசேஜ் அனுப்பலாம்; அசத்தும் கூகுள்!
நீங்கள்
ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர் என்றால் இனி மெசேஜ்களை டைப் செய்து தான்
அனுப்ப வேண்டும் என்றில்லை. உங்கள் கையாலேயே எழுதி அனுப்பலாம் தெரியுமா?
அதற்கான வசதியை கூகுள், ஹேன்ட்ரைட்டிங் இன்புட் (Google Handwriting Input )
எனும் புதிய செயலி ( application) மூலம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்
உள்ளிட்ட 82 உலக மொழிகளில் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு?
போலி சான்றிதழ், முன்னுரிமை வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி நிர்ணயகுழப்பம் போன்றவற்றால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளன.
பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!
பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal Activation Number) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளர்.
வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் - ஒரு வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?
பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல.
Subscribe to:
Posts
(
Atom
)