செய்தி பகிர்வு தே .தாமஸ் ஆண்டனி ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நாதகவுண்டன் பாளையம் ,மொடக்குறிச்சி ஒன்றியம் .
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 அரசு பள்ளி ஆசிரியர்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது .இவர்களது கற்பித்தல் முறைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் ,மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது .அரசு பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்யாசபடுத்தவும் ,ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் ,பள்ளிக் கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது .
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,நாதகவுண்டன் பாளையம் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் தாமஸ் ஆண்டனி ,பெருந்துறை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,வீரணாம்பாளையம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மயில்சாமி ,பவானி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ,சின்னியம்பாளையம் ஆசிரியை சுதா மற்றும் பவானி ஒன்றியம் ,ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இராமநாதபுரம் பள்ளி ஆசிரியை வாசுகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு ,இவர்களது கற்பித்தல் முறைகள் குறித்து வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை நேரில் பார்வையிட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கான இயக்குனர் ஜெரோம் தலைமையிலான குழுவினர் மேற்கண்ட பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர் .இயக்குனர் ஜெரோம் கூறுகையில் ,தமிழ்நாட்டில் தொடக்க கல்வி முதல் மேல்நிலை கல்வி முதல் ஆசிரியர்கள் பலவிதமான கற்பித்தல் முறைகளில் ஈடுபடுகின்றனர் .இந்த ஆண்டு 75 ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களது கற்பித்தல் முறைகளில் கையாளும் புதுமைகளை ஒலி ,ஒளி காட்சிகளாக படம் பிடித்து பிற ஆசிரியர்களுக்கும் இணையதளம் மூலம் கொண்டு செல்கிறோம் .தொடர்ந்து இதுபோன்ற புதுமை குறித்து மற்றவர்களுக்கு காண்பிக்க உள்ளோம் என்றார் .
இதுவரை தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 ஆசிரியர்களில் 58 ஆசிரியர்களின் கற்பித்தல் முறையினை வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ,இன்னும் ஓரிரு வாரத்தில்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை