Ad Code

Responsive Advertisement

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி - விண்ணப்பிக்கக் கடைசி தேதி மே 6

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு கடந்த 4 நாள்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்களது விண்ணப்பங்களை இணைய வழியில் (ஆன்-லைன்) பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, கடந்த 2 நாள்களில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வக உதவியாளர்கள் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலேயே இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

உரிய சான்றிதழ்களுடன் சென்று இந்த மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி மே 6 ஆகும்.

இந்தத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வக உதவியாளர் பணி நியமனம் அந்தந்த மாவட்ட அளவில் நடைபெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறுவோரிலிருந்து 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement