'ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்து, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, ஓய்வூதியர்கள் தகுதியுள்ள கழித்தல்களுக்கான விவரங்களை தெரிவிக்கலாம்' என, அரசு அறிவித்துள்ளது.
மாதாந்திர ஓய்வூதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்வது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கருவூல கணக்குத் துறை இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒவ்வொரு நிதியாண்டிலும் ஓய்வூதியதாரர்கள் மார்ச் முதல் பிப்ரவரி வரையில் ஓராண்டு வரை பெறும் மொத்த ஓய்வூதியத்தின் மீது வருமான வரி கணக்கிடப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதியம், முதலீடுகள், பிடித்தம் செய்யப்பட வேண்டிய விவரங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே தெரிவிப்பதற்கு வசதியாக கருவூலக் கணக்குத் துறை ஒரு படிவத்தை வடிவமைத்துள்ளது.
இந்தப் படிவத்தை www.tn.gov.inkaruvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்-கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக, ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதிய விவரம், பிடித்தங்கள், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிகர ஓய்வூதியம் ஆகிய விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், தேவையான விவரங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்-கருவூல அலுவலரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
வருமான வரி பிடித்தத்துக்கு உள்படும் ஓய்வூதியதாரர்கள் தங்களது நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்-கருவூல அலுவலருக்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். வருமான வரி சட்டத்தின் கீழ், தகுதியான முதலீடுகளுக்கு உரிய சான்றுகளை அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் வருமான வரி அதிகளவு பிடித்தம் செய்யப்படாமல் உரிய வரி மட்டுமே பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு செய்வதற்கு உரிய முதலீடுகளுக்கான சான்றுகளை ஜனவரி மாதத்துக்குள் அளிக்க வேண்டும்.
குறித்த காலத்துக்குள் அளிக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்கள், தங்களிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே வரிகளை பிடித்தம் செய்வர். கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டால் அது ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் திருப்பி வழங்கப்படாது. வருமான வரி செலுத்தும் ஓய்வூதியர்கள், www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வரி வரவு அட்டவணையை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம் என்று கருவூலத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நிதியாண்டிலும் ஓய்வூதியதாரர்கள் மார்ச் முதல் பிப்ரவரி வரையில் ஓராண்டு வரை பெறும் மொத்த ஓய்வூதியத்தின் மீது வருமான வரி கணக்கிடப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதியம், முதலீடுகள், பிடித்தம் செய்யப்பட வேண்டிய விவரங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே தெரிவிப்பதற்கு வசதியாக கருவூலக் கணக்குத் துறை ஒரு படிவத்தை வடிவமைத்துள்ளது.
இந்தப் படிவத்தை www.tn.gov.inkaruvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்-கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக, ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதிய விவரம், பிடித்தங்கள், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிகர ஓய்வூதியம் ஆகிய விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், தேவையான விவரங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்-கருவூல அலுவலரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
வருமான வரி பிடித்தத்துக்கு உள்படும் ஓய்வூதியதாரர்கள் தங்களது நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்-கருவூல அலுவலருக்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். வருமான வரி சட்டத்தின் கீழ், தகுதியான முதலீடுகளுக்கு உரிய சான்றுகளை அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் வருமான வரி அதிகளவு பிடித்தம் செய்யப்படாமல் உரிய வரி மட்டுமே பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு செய்வதற்கு உரிய முதலீடுகளுக்கான சான்றுகளை ஜனவரி மாதத்துக்குள் அளிக்க வேண்டும்.
குறித்த காலத்துக்குள் அளிக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்கள், தங்களிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே வரிகளை பிடித்தம் செய்வர். கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டால் அது ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் திருப்பி வழங்கப்படாது. வருமான வரி செலுத்தும் ஓய்வூதியர்கள், www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வரி வரவு அட்டவணையை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம் என்று கருவூலத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை