தமிழகத்தில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலாளர் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆறு சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். இதன் மூலம், அகவிலைப்படி உயர்வானது 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயரும். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.
உடனடியாக அளிக்க வேண்டும்: அகவிலைப்படி உயர்வை அளிக்க முதன்மை மாநிலக் கணக்காய்வுத் தலைவரிடம் இருந்து முறைப்படியான அனுமதி பெறும் வரை காத்திருக்க வேண்டாம். சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி, கருவூல அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பொதுத்துறை வங்கிகள் உடனடியாக திருத்திய அகவிலைப்படியை வழங்கலாம்.
யார் யாருக்கு பயன்? அகவிலைப்படி உயர்வானது பல்வேறு தரப்பினருக்கும் பொருந்தும். அதன்படி, அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும், உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின் கீழ், சிறப்பு ஓய்வூதியம், கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு பொருந்தும் என்று தனது உத்தரவில் நிதித் துறைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை