சிவில் நீதிபதி தேர்வில் நாமக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி ஜெய்சூரியா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இவரது மகள் விபிசி(25), திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 முடித்து விட்டு திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் பிஎல் படித்தார். இதையடுத்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான தேர்வை எழுதினார். தமிழகம் முழுவதும் இந்த தேர்வினை மொத்தம் 6172 பேர் எழுதினர்.
இதில் 590 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களிடம் நேர்முக தேர்வு, சான்று சரிபார்த்தல் ஆகியவற்றில் 314 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், விபிசி 323.75 மதிப்பெண் பெற்று, தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை திருச்செங்கோடு குற்றவியல் நீதிபதி சண்முகம் உட்பட பலர் வாழ்த்தினர். இது குறித்து விபிசி கூறுகையில், தனது வெற்றிக்கு பெற்றோரும், பயிற்சியாளர்களும், ஊக்குவித்த வழக்கறிஞருமே காரணம் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை