பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவதற்கான நோடல் (சேவை) மையத்தை, திருத்தணி பகுதியில் கூடுதலாக துவக்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூரில் இரண்டு, பொன்னேரி, பூந்தமல்லி, அம்பத்துார், செங்குன்றத்தில், தலா ஒன்று என, ஆறு இடங்களில் கடந்த 24ம் தேதி முதல், விண்ணப்பதாரர்கள், வெப் கேமரா மூலம் புகைப்படத்துடன், விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
வரும் 6ம் தேதி வரை இப்பதிவு நடைபெறும் என்பதால், பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 80 கி.மீ., துாரம் பயணம் செய்து, திருவள்ளூர் மற்றும் மணவாள நகரில் உள்ள சேவை மையங்களுக்கு வருகின்றனர்.
இதனால், சேவை மையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், வீண் அலைச்சலும், கால விரயமும் ஏற்படுகிறது. எனவே, திருத்தணி பகுதியில், கூடுதலாக சேவை மையம் அமைக்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை