தமிழகத்தில் 41 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சென்னை தரமணியல் உள்ள மைய பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் நடத்தப்படும் இரண்டரையாண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் பட்டயப்படிப்பிற்கான முதலாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் நடத்தப்படும் 1 வருட ஒப்பனை கலை பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்காக மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 4ம் தேதி முதல் நேரில் பெற்று கொள்ளலாம். மேலும் விண்ணப்ப படிவங்களை www.tndte.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.150. எஸ்சி, எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை