மாநிலம் முழுவதும் அம்மா மருந்தகங்களில் அதிகபட்ச சில்லரை விலையில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களில் தற்போது வெளிமார்க்கெட் விலையில் இருந்து 15 சதவீதம் குறைவான விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன.
தற்போது அம்மா மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் வாங்கி விற்பனை செய்யப்படுகின்றன. விரைவில் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும் இந்த நடைமுறை மாற்றப்படஉள்ளது.தமிழ்நாடு கூட்டுறவு நுகர்பொருள் இணையம் மூலம் ஒருங்கிணைப்பு கொள்முதல் முறையில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இந்த முறையில் மருந்துகளை வினியோகம் செய்ய 2000 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கேட்டுள்ளன.இவ்வாறு மருந்துகள் கொள்முதல் செய்யப்படும் போது, மேலும் குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகளை விற்பனை செய்ய முடியும். எனவே தற்போதைய விலையில் இருந்து கூடுதலாக 10 சதவீதம் விலை குறைத்து மருந்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஒருங்கிணைப்பு கொள்முதல் முறையில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை சேமிக்க ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கூட்டுறவு மருந்து குளிரூட்டும் மையங்கள் கட்டப்பட்டு தயாராக உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை