'அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், துாய்மை திட்ட நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசு சார்பில், அனைத்து வகை வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பொது இடங்கள் போன்றவற்றில், 'துாய்மை இந்தியா' எனப்படும், 'ஸ்வச் பாரத்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு நிறுவனங்களிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
சுற்றறிக்கை : அதன்படி, செப்., 1 - 15 வரை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், 'மாநில பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், செப்., 1ல், துாய்மை இந்தியா உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும். 'பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கழிப்பறை வசதி களை, அதிகாரிகளும், ஆசிரியர்களும் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தயாரிக்க வேண்டும்.
வழிகாட்டுதல்கள் 'மாணவ, மாணவியருக்கு, 'துாய்மை இந்தியா' குறித்து, போட்டி கள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். பள்ளி மேலாண் குழு, பெற்றோர் - ஆசிரியர் கழகம் ஆகியவற்றை கூட்டி, துாய்மையை பேணுவதற்கான திட்டம் குறித்து, ஆலோசிக்க வேண்டும்.
'பள்ளி வளாகங்களில் குவிக்கப்பட்டுள்ள, தேவையற்ற பொருட்கள், குப்பையை அகற்ற வேண்டும்' என, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை