தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய மாற்றம் தாமதமாகி வரும் நிலையில் 25 சதவீதம் இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். ஓய்வூதியம் பெறாத அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதன்படி, 1-4-2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத அரசு பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் வழங்க வேண்டும்.
மதுபான கடைகள் மூடப்படுவதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு அரசு துறைகளில் காலி பணியிடங்களில் நிரந்தர பணி வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட்டு அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு டிஎன்சிஎஸ்சி-க்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் சாகுல்அமீது நன்றி கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை