மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, தமிழக அரசு நியமித்த குழுவின் பதவி காலத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
குழுவில், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர், உள்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர், உறுப்பினர் செயலராக உமாநாத் ஆகியோர் இடம் பெற்றனர்.
இக்குழுவினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டனர். அறிக்கையை, ஜூன், 30க்குள் அளிக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கான காலம், நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்னமும் பணி நிறைவு பெறாததால், குழுவின் பதவி காலத்தை, மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது, செப்டம்பர், 30 வரை நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை