- அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு புதிய கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது.
விளைநிலங்களை வீட்டுமனைகள் ஆக்குவதாகத் தொடரப்பட்ட வழக்கில், புதிய வரைவு விதிகளுடன் கூடிய அரசாணைகளை தமிழக அரசு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வீட்டு மனைகளாக்க அனுமதி இல்லாத நிலங்கள்
விவசாய நிலங்கள், ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள், அரசு நிலம், கோயில் இடம், வக்பு வாரிய நிலம், உரிமம் இல்லாத காலி நிலம் ஆகியவற்றை வீட்டு மனைகளாகப் பதிவு செய்ய அனுமதி இல்லை.தொடர்ந்து வேளாண்மை செய்யத் தகுதியான நிலத்தை, வீட்டு மனைகளாக மாற்றக் கூடாது.வீட்டு மனையாக்க விண்ணப்பிக்கப்படும் இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலம் இல்லை என்பதற்கு வேளாண்துறை இணை இயக்குநரிடம் அறிக்கை பெற வேண்டும்.
புதிய கட்டணம்
மாநகராட்சிகளில் பத்திரப் பதிவு மேற்கொள்ள ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 கட்டணம். நகராட்சிகளுக்கு ரூ.60-ம்,பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு ரூ.30-ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை