சிறுபான்மையின மாணவர்கள் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அன்புச்செல்வனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
தாய்கோ வங்கி மூலம் தனிநபர் கடன் திட்டத்தில் ஆட்டோ வழங்கப்படுகிறது. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்ப இளங்கலை கல்வி பயில் வருடத்திற்கு 3 லட்சம் வீதம் அதிகபட்சம் 15 லட்சம் வரையிலும், முதுகலை பயில வருடத்திற்கு 3 லட்சம் வீதம் அதிகபட்சம் 9 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் கல்வி பயில வருடத்திற்கு 4 லட்சம் வீதம் அதிகபட்சம் 20 லட்சம் வரையிலும் 3 சதவிகிதம் வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இக்கடன் உதவி பெறுவதற்கான அனைத்து விபரங்கள் மற்றும் கட்டணமின்றி விண்ணப்பங்களை பெற சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம். சென்னை இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளிலும் கட்டணமின்றி விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை