தியாகதுருகம் அரசு பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, அந்தோணிராஜ் என்பவரின் மனைவி, நோயல் ரோஸ்மேரி, 24. நிறைமாத கர்ப்பிணியான இவர், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்காக, நேற்று காலை, தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வந்திருந்தார்.காலை, 10:00 மணிக்கு, தேர்வு துவங்கியது. 10:15 மணியளவில், ரோஸ்மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
எனினும், 25 கேள்விகளுக்கு பதில் எழுதிய நிலையில், வலி கடுமையானதால், தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் நிலைமையை கூறினார்.முதன்மை கண்காணிப்பாளர் சசிகலாதேவி, உடனடியாக, 108 ஆம்புலன்சை வரவழைத்து, ரோஸ்மேரியை, தியாகதுருகம் வட்டார சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தார்.அங்கு, ரோஸ்மேரிக்கு, காலை, 11:00 மணியளவில், சுக பிரசவத்தில், அழகான பெண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்து, கணவர் அந்தோணிராஜ் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், தேர்வை முழுமையாக எழுத முடியாமல் போனது, ரோஸ்மேரிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. ரோஸ்மேரிக்கு இது, இரண்டாவது பிரசவம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை