இன்ஜினியரிங் கல்லுாரிகளின், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. அண்ணா பல்கலை இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படும், ஒற்றைசாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங், ஜூன், 27ல், துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில், பங்கேற்க விரும்புவோர், இன்று முதல் அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மே, 31 வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான அறிவிக்கை மற்றும் விதிகள், நேற்று வெளியிடப்பட்டன.
ஆன்லைன் வழியே, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்தோர், அதன் பிரதியை நகல் எடுத்து, செயலர், தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.கூடுதல் விபரங்களை, அண்ணா பல்கலை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை