பெரும்பாலான மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு செயல்படுத்தப்படாமல் உள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2016 சட்டசபைத் தேர்தலுக்கு முன் சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் இந்த தொகை ஏற்கனவே ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. இந்த அரசாணையை ஒரு சில மாவட்டங்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் அமல்படுத்தவில்லை.
இதனால் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் சத்துணவு மையங்களை கூடுதலாக கவனிக்கும் பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 600 ரூபாயும், 2010 க்கு பின் வழங்கவில்லை. மேலும் சமையலர், உதவியாளர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு தரவில்லை. இதை கண்டித்து போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாண்டி கூறுகையில், “ஓய்வூதிய உயர்வுக்கு 2016 பிப்ரவரியில்
அரசாணை வெளியிடப்பட்டது. ஓராண்டிற்கு மேலாகியும் நடை
முறைப்படுத்தவில்லை,” என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை