எட்டாம் வகுப்பு வரை, மெட்ரிக் பள்ளிகளில் இலவசமாக படிப்பதற்கான, விண்ணப்ப பதிவுக்கு, மே, 26 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணம், நன்கொடை இன்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எல்.கே.ஜி.,யில் சேரும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை, எந்த கட்டணமும் இன்றி படிக்கலாம்.
பொருளாதாரத்தில் நலிந்த, ஆண்டுக்கு, ௨ லட்சம் ரூபாய்க்கு குறைவான, வருமானம் பெறுவோரின், குழந்தைகள், இதில் சேரலாம். இந்த ஆண்டு, எல்.கே.ஜி., என்ற நுழைவு வகுப்பில், 10 ஆயிரம் பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள், ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், பதிவு செய்ய வேண்டும். இதுவரை, 43 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு, இன்று முடிவதாக இருந்தது.
ஆனால், அவகாசத்தை நீட்டிக்க, பெற்றோர் விரும்புவதாக, நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, வரும், 26ம் தேதி வரை, கூடுதல் அவகாசம் வழங்கி, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்த விபரங்களை, மாவட்ட கலெக்டர் அலுவலகம், முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், தொடக்கப் பள்ளிக்கல்வி அதிகாரி அலுவலகம் ஆகியவற்றில், தெரிந்து கொள்ளலாம்.
இ - சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை