Ad Code

Responsive Advertisement

திறந்தநிலை பல்கலை 'அட்மிஷன்' நீட்டிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.பல்கலை பதிவாளர் விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 37 இளநிலை, 32 முதுநிலை, 31 தொழிற்கல்வி மற்றும் ஐந்து சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் மாணவர்களை சேர்க்க, ஏப்., 30 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது, மே, 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விபரங்களை, www.tnou.ac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ள லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement