'பேராசிரியர் பதவிக்கான, 'செட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, குறுக்கு வழியில் முயற்சிக்க வேண்டாம்' என, உயர் கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்க உள்ளது.
இந்நிலையில், செட் தேர்வில் தேர்ச்சி பெற, திருவள்ளுவர் பல்கலை அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் சிலர், பணம் பெறுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைத்தரகர்கள் பலர், மூன்று முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை, பேரம் பேசுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, செட் தேர்வை நடத்தும், கொடைக்கானல் தெரசா பல்கலை அதிகாரிகள் கூறுகையில், 'தேர்வர்கள் யாரும் குறுக்கு வழியில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டாம்.
'செட் தேர்வு விடைத்தாள் திருத்தம், மிகவும் பாதுகாப்பான முறையில் நடக்கிறது. யாரும் பணம் கொடுத்து, ஏமாற வேண்டாம். இது குறித்து, ஆதாரபூர்வமாக புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை