'கம்ப்யூட்டர்களை பாதித்து வரும், 'வான்னக்ரை' வைரசை தம்மால் தடுத்து நிறுத்த முடியும்,'' என, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, சிறுமி விஷாலினி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த கல்யாணகுமாரசாமி - சேதுராகமாலிகா தம்பதியின் மகள் விஷாலினி , 16. சிறு வயதில் தமது, ஐ.கியூ., திறனுக்காக பாராட்டப்பட்டவர்.
சிறு வயதிலேயே, 'மைக்ரோசாப்ட், சிஸ்கோ' போன்ற நிறுவனங்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். கடந்த ஆண்டு, பிரதமர் மோடியுடன் நேரலையில் உரையாடி பாராட்டு பெற்றார். ஒன்பதாம் வகுப்பு வரை பயின்றவர். தற்போது, 16 வயதில் நேரடியாக பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொழில் நுட்பத்தில், பி.டெக்., இரண்டாம் ஆண்டு பயின்று வரு கிறார்.
சிறுமி விஷாலினியை சமீபத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம், பெங்களூரு மையத்தில், 700 விஞ்ஞானிகள் முன்னிலையில் புதிய தகவல் தொழில் நுட்பம் குறித்து உரையாற்ற அழைத்தது.
திருநெல்வேலியில் விஷாலினி கூறியதாவது:தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும், வான்னக்ரை வைரஸ் பாதிப்பு குறித்து, வெவ்வேறு தகவல்கள் வருகின்றன.
வைரசை தவிர்ப்பதற்கு, இணையத்தில் இருந்து ஒரு, 'டொமைனை' நீக்கினால் போதும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், போதுமானது அல்ல. அப்படியும் அதன் தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். கம்ப்யூட்டர்கள் மட்டுமல்லாது, எம்.ஆர்.ஐ., ஸ்கேனர்கள், ரத்தம் சேமிக்கும் மையங்களையும் குறிவைத்து வைரஸ் அனுப்பப்படுகிறது. மற்ற நாடுகளில் இருக்கும் விழிப்புணர்வு இந்தியாவில் இல்லை என்பதும் நிதர்சனம். வைரஸ் அனுப்பிய ஹேக்கர்கள், அதற்காக பணத்தை மிரட்டி பெறுகின்றனர். பணத்தை அனுப்பிய பிறகும், வைரசை நீக்க மறுக்கின்றனர். எனவே, இதை அழித்தொழிப்பது தான் நல்லது. ஆந்திரா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மற்ற மாநிலங்களும் பாதிக்கும் முன், அவற்றை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கடமை. நான் இந்த வைரசுக்கு எதிரான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டால், அவர்களது நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களை சரி செய்து தருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த கல்யாணகுமாரசாமி - சேதுராகமாலிகா தம்பதியின் மகள் விஷாலினி , 16. சிறு வயதில் தமது, ஐ.கியூ., திறனுக்காக பாராட்டப்பட்டவர்.
சிறு வயதிலேயே, 'மைக்ரோசாப்ட், சிஸ்கோ' போன்ற நிறுவனங்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். கடந்த ஆண்டு, பிரதமர் மோடியுடன் நேரலையில் உரையாடி பாராட்டு பெற்றார். ஒன்பதாம் வகுப்பு வரை பயின்றவர். தற்போது, 16 வயதில் நேரடியாக பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொழில் நுட்பத்தில், பி.டெக்., இரண்டாம் ஆண்டு பயின்று வரு கிறார்.
சிறுமி விஷாலினியை சமீபத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம், பெங்களூரு மையத்தில், 700 விஞ்ஞானிகள் முன்னிலையில் புதிய தகவல் தொழில் நுட்பம் குறித்து உரையாற்ற அழைத்தது.
திருநெல்வேலியில் விஷாலினி கூறியதாவது:தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும், வான்னக்ரை வைரஸ் பாதிப்பு குறித்து, வெவ்வேறு தகவல்கள் வருகின்றன.
வைரசை தவிர்ப்பதற்கு, இணையத்தில் இருந்து ஒரு, 'டொமைனை' நீக்கினால் போதும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், போதுமானது அல்ல. அப்படியும் அதன் தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். கம்ப்யூட்டர்கள் மட்டுமல்லாது, எம்.ஆர்.ஐ., ஸ்கேனர்கள், ரத்தம் சேமிக்கும் மையங்களையும் குறிவைத்து வைரஸ் அனுப்பப்படுகிறது. மற்ற நாடுகளில் இருக்கும் விழிப்புணர்வு இந்தியாவில் இல்லை என்பதும் நிதர்சனம். வைரஸ் அனுப்பிய ஹேக்கர்கள், அதற்காக பணத்தை மிரட்டி பெறுகின்றனர். பணத்தை அனுப்பிய பிறகும், வைரசை நீக்க மறுக்கின்றனர். எனவே, இதை அழித்தொழிப்பது தான் நல்லது. ஆந்திரா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மற்ற மாநிலங்களும் பாதிக்கும் முன், அவற்றை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கடமை. நான் இந்த வைரசுக்கு எதிரான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டால், அவர்களது நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களை சரி செய்து தருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை