ஏப்ரல், 30 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. 10ம் வகுப்புக்கு, மதிப்பெண் தொகுப்பு பணிகள் நடந்து வருகின்றன.
தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வரும், 29ல் தேர்வுகள் முடிவதாக இருந்தன. ஆனால், முன்கூட்டியே தேர்வை முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், வரும், 29 மற்றும், 30ல், 'டெட்' தேர்வுகள் நடக்க உள்ளதால், அதில் கண்காணிப்பாளர் பணி, விடைத்தாள் கட்டுகளை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் திருத்தும் பணிகள் நடக்க உள்ளன. எனவே, ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை