தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும். முதலில் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பிறகுதான் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுவதாலும், அனல் காற்று வீசுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் 25 முதல் 29-ஆம் தேதிவரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை