வேலுார் மாவட்டத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டிபாசிட் செய்த, 100 பேருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, கடந்தாண்டு நவ., 8ல் பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பொதுமக்கள், தங்களிடமிருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் செலுத்தி, புதிய நோட்டுகளை பெற்றனர்.
இந்நிலையில், வங்கிகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தவர்களின் பட்டியல், வங்கிகள் சார்பில், வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வருமான வரித்துறையினர், 18ம் தேதி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வேலுார் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேலுார் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தவர்கள் விபரம் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 100 பேருக்கு, இந்த பணம் எப்படி வந்தது என, விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் இருந்து உரிய பதில் வராத பட்சத்தில், அவர்கள் டிபாசிட் செய்த பணத்திற்கு, வருமான வரி கட்ட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
'உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, கடந்தாண்டு நவ., 8ல் பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பொதுமக்கள், தங்களிடமிருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் செலுத்தி, புதிய நோட்டுகளை பெற்றனர்.
இந்நிலையில், வங்கிகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தவர்களின் பட்டியல், வங்கிகள் சார்பில், வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வருமான வரித்துறையினர், 18ம் தேதி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வேலுார் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேலுார் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தவர்கள் விபரம் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 100 பேருக்கு, இந்த பணம் எப்படி வந்தது என, விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் இருந்து உரிய பதில் வராத பட்சத்தில், அவர்கள் டிபாசிட் செய்த பணத்திற்கு, வருமான வரி கட்ட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை