'சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, தொழிற்கல்வி கட்டாயம் என்றாலும், மொழி பாடங்களில் மாற்றம் இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, விருப்பத்தின் அடிப்படையில், தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இவற்றில், பெரும்பாலான பாடங்களுக்கு மாணவர்களிடம் வரவேற்பு இல்லாததால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, 41 பாடங்களை நீக்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய விதிகளை, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பு மாணவர்கள், தொழிற்கல்வி பாடத்தையும் சேர்த்து, ஆறு பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில், ஏதாவது ஒன்றில், மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால், தொழிற்கல்வி பாடம், ஐந்தாம் பாடமாக கணக்கில் எடுக்கப்பட்டு, மாணவர்கள் அடுத்த நிலைக்கு தேர்ச்சி செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.இரு மொழி பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டால், அதற்கு மாற்றாக தொழிற்கல்வி, ஐந்தாம் பாடமாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற குழப்பம், பல பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., அளித்த விளக்கம்:இரு மொழி பாடங்களிலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்; அதில் மாற்றம் இல்லை. மூன்று முக்கிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறாவிட்டால் மட்டுமே, தொழிற்கல்வி மாற்று பாடமாக எடுக்கப்படும். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு, மாணவர்கள் விரும்பினால், துணை தேர்வு எழுதலாம்.இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இவற்றில், பெரும்பாலான பாடங்களுக்கு மாணவர்களிடம் வரவேற்பு இல்லாததால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, 41 பாடங்களை நீக்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய விதிகளை, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பு மாணவர்கள், தொழிற்கல்வி பாடத்தையும் சேர்த்து, ஆறு பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில், ஏதாவது ஒன்றில், மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால், தொழிற்கல்வி பாடம், ஐந்தாம் பாடமாக கணக்கில் எடுக்கப்பட்டு, மாணவர்கள் அடுத்த நிலைக்கு தேர்ச்சி செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.இரு மொழி பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டால், அதற்கு மாற்றாக தொழிற்கல்வி, ஐந்தாம் பாடமாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற குழப்பம், பல பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., அளித்த விளக்கம்:இரு மொழி பாடங்களிலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்; அதில் மாற்றம் இல்லை. மூன்று முக்கிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறாவிட்டால் மட்டுமே, தொழிற்கல்வி மாற்று பாடமாக எடுக்கப்படும். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு, மாணவர்கள் விரும்பினால், துணை தேர்வு எழுதலாம்.இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை