Ad Code

Responsive Advertisement

புயல் எச்சரிக்கை: 5 கடலோர மாவட்ட பள்ளிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இதனால், நாளை காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இது படிப்படியாக அதிகரித்து உள்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


இந்த புயல் சின்னத்தால் டிசம்பர் 2ம் தேதி முதல் அனேக இடங்களில் பெரும் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும். இந்த புயலுக்கு நாடா (NADA) என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாடா புயல் எச்த்ச்சரிக்கை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 2 வானூர் மரக்காணம் தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளத்து

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement