மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறும் என மத்தியசுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.
தில்லியில் 7-வது தேசிய உடல் உறுப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா " மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமே மட்டுமே நடைபெறும் "என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உடனடியாக அமல்படுத்த முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்து இந்த தேர்வை ஒராண்டுக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் 7-வது தேசிய உடல் உறுப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா " மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமே மட்டுமே நடைபெறும் "என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உடனடியாக அமல்படுத்த முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்து இந்த தேர்வை ஒராண்டுக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை