தமிழக அரசு ஊழியர்/ஆசிரியர்களுக்கு 6 மாதமாக இருக்கும் மகப்பேறு விடுப்பை 9 மாதமாக உயர்த்தி அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் இதயதெய்வம் தாயுள்ளம் கொண்ட புரட்சித்தலைவி "அம்மா" அவர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவிப்பதாக பேரவை பொதுச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு ஊழியர்/ஆசிரியர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை மாண்புமிகு முதலமைச்சர் "அம்மா" அவர்கள் செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக தாயுள்ளம் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கு பல புரட்சிகர திட்டங்களை செயல் படுத்தி உள்ளார். அதில் குறிப்பிட்டு கூறவேண்டும் என்றால்
1) வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டம்
2) பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை
3) தாலிக்கு தங்கம்
போன்ற புரட்சிகர திட்டங்களாகும்.
இதனை தொடர்ந்து அரசு பெண் ஊழியர்கள் தங்களின் குழந்தை பிரசவத்திற்கு பின் மீண்டும் வேலைக்கு செல்லும் போது தன குழந்தைகளை கண்டு அவர்கள் படும் மன உளளைச்சல் வார்த்தைகளால் சொல்ல இயலாது . மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இதனை அறிந்த தமிழகத்தின் முதல்வர் புரட்சித்திட்டங்களின் தாய் "அம்மா" அவர்கள் மகப்பேறு விடுப்பை 9 மாதமாக உயர்த்தி செப்.1, 2016 அன்று அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று அரசனையும் வெளியிட்டு உள்ளார்.
இதன்மூலம் தாய் - குழந்தைக்கு உள்ள பிரிவு விளக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும்.
இந்த அரசாணை மூலம் எண்ணற்ற அரசு பெண் ஊழியர்களின் துயர் துடைத்துள்ளார். இதற்காக தமிழக அரசு ஊழியர்/ஆசிரியர்கள் சார்பில் நன்றிகள் "அம்மா" அவர்களுக்கு காணிக்கை ஆக்குகிறோம்.
இவன்
- பாவலர் க.குகானந்தம், நிறுவனத்தலைவர்
- பெ. கிருஷ்ணமூர்த்தி, மாநிலப் பொதுச்செயலாளர்
- பெ. பராம்சாமி, மாநிலத்தலைவர்
- சு.சீனிவாசன், மாநிலப் பொருளாளர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை