அரசு இன்ஜி., கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து, புகைப்படம் இணைக்காதோர், நாளைக்குள் புகைப்படம் இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்கான விண்ணப்பங்கள், செப்.,7 வரை பெறப்பட்டன. விண்ணப்பங்களில், புகைப்படம் இணைக்காமல் தாக்கல் செய்தோரின் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இணையதளத்தில் இணைக்கப்பட்டு உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து, புகைப்படம் ஒட்டி, அத்தாட்சி பெற்ற, அரசு அதிகாரியின் கையெழுத்துடன், நாளைக்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை