'பள்ளிகளில், 'சீட்' வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலிப்பவர்களிடம் ஏமாற வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் எச்சரித்துள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியம் எனப்படும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதைப் பயன்படுத்தி, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் போல் நடித்து, பெற்றோரிடம் பணத்தை மோசடி செய்வது அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளதாவது:சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் என, சிலர் தங்களை போன் மூலம் அறிமுகப்படுத்தி, பள்ளிகளில் சீட் வாங்கித் தருவதாக பெற்றோரிடம் கூறுகின்றனர். இவர்களை நம்பி, வங்கிகளில் பணத்தை டிபாசிட் செய்ய வேண்டாம். இது போன்ற மோசடி தொடர்பாக, அதிகளவில் புகார்கள் வருகின்றன. இவ்வாறு, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை