கல்வித்துறையில் 80 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கற்றல், கற்பித்தல் பணிகள் கண்காணிப்பு, நலத் திட்டம் வழங்கல் உள்ளிட்டவற்றில் முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,), மாவட்ட கல்வி அலுவலர்களின் (டி.இ.ஓ.,) பங்கு முக்கியம். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 30 கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன; அப்பணிகளையும் சி.இ.ஓ.,க்களே கவனிக்க வேண்டியுள்ளது.
தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுக்கான மாணவர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. டி.இ.ஓ.,க்கள் இல்லாத கல்வி மாவட்டங்களில், இப்பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் 400 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆனால், சி.இ.ஓ.,- டி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பலாம். இதில், அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை