'உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை தர ஊக்க ஊதியம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் என, ஊதிய உயர்வுகள் வழங்கப்படுகின்றன. உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நேரில் மனு : இதேபோல், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு தேர்வு நிலை தர ஊதியம் வழங்குவது குறித்து, தெளிவுரை வழங்க வேண்டும்.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் வேறு பாடங்களில் உயர்கல்வி முடித்தால், அதற்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமினை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை