பி.ஆர்க்., படிப்புக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல் மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அண்ணா பல்கலை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், நாளை மறுநாள் நடக்கிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில், 41 கல்லுாரிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்றன. இந்த ஆண்டு புதிதாக சில கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் எத்தனை கல்லுாரிகளுக்கு, ஆர்கிடெக்ட் கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவற்றில், எத்தனை கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை இணைப்பு வழங்கப்பட்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றன என்ற விபரங்களை, பல்கலை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. அதேபோல, கவுன்சிலிங்குக்கான இட ஒதுக்கீட்டை நிர்வகிக்கும், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககமும், கல்லுாரிகளில் எத்தனை இடங்கள் இந்த ஆண்டு, கவுன்சிலிங் மூலம் ஒதுக்கப்பட உள்ளன என்ற பட்டியலை, பல்கலை இணையதளத்தில் வெளியிடவில்லை.
அதனால், இந்த ஆண்டு பி.ஆர்க்., சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கல்லுாரிகளின் பெயர் விபரம், கட்டண விபரம், இடங்களின் எண்ணிக்கை, தேர்ச்சி மற்றும் செயல்பாட்டு திறன் தெரியாமல் தவிக்கின்றனர்.
அதேநேரத்தில், பி.ஆர்க்., நடத்தும் தனியார் கல்லுாரிகள், இடைத்தரகர்கள் மூலம், பல லட்சம் ரூபாய் நன்கொடை பேரம் பேசி இடங்களை விற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
பி.ஆர்க்., கல்லுாரி பட்டியல் வெளியிட்டால் மட்டுமே, கவுன்சிலிங்குக்கு முன், கல்லுாரிகளை விசாரித்து, எதில் சேர்வது என, மாணவர்கள் முடிவு செய்ய முடியும். இந்த விபரங்களை தராமல் அண்ணா பல்கலை மவுனமாக உள்ளதால், தனியார் கல்லுாரிகளுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை