மாணவர்களிடம் நற்குணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவிவேகானந்தர் ரதயாத்திரை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. வருகிற 4–ந்தேதி வரை ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த ரதங்கள் செல்கின்றன.
விழாவில் ஆடிட்டர் எஸ்.குரூமூர்த்தி, நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதுபற்றி இந்து ஆன்மிக மற்றும் சேவை மைய துணைத்தலைவர் ராஜலட்சுமி கூறியதாவது:–ஆயிரம் பள்ளிகள்வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல், உயிரினங்களைப் பேணுதல், சுற்றுச் சூழலைப் பராமரித்தல், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை உணர்த்துதல் ஆகிய 6 நற்குணங்களை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறும் விவேகானந்தர் ரதயாத்திரை நடத்தப்படுகிறது.
இன்று (நேற்று) இரவு புறப்படும் இந்த ரதங்கள் வருகிற 4–ந்தேதி வரை சென்னை மாநகர், புறநகர் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுக்கு நற்குணங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்.வருகிற 2–ந்தேதி முதல் 8–ந்தேதி வரை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ளஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கும் இந்து ஆன்மிக கண்காட்சியை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை