'தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி, புதிய பாடங்கள் இடம் பெறும் வகையில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஜே.பி.கிறிஸ்டோபர் மற்றும் மாநில செயலர் கலை விஜயகுமார் ஆகியோர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தனியார் பள்ளிகளின் அங்கீகார பிரச்னை மற்றும் பாடத்திட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.
இதுகுறித்து, சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:
சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து விட்ட நிலையில், பள்ளிகளுக்கு கட்டடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை அமைக்க, போதிய இடவசதி இல்லை. பாதுகாப்பு விஷயங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து விட்டு, நிலத்தின் அளவு குறித்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கி, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால அச்சத்தை போக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பழமையானது என்பதால், மற்ற பாடத்திட்ட மாணவர்களுடன், தமிழக மாணவர்கள் போட்டி போட திணறுகின்றனர். இதை போக்க, தமிழக அரசு புதிய குழு அமைத்து, புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
தீர்மானம் : கட்டாய கல்வி சட்டத்தில், 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான நிலுவைத் தொகையை விரைந்து வழங்கினால், நிதி பிரச்னையிலிருந்து பள்ளிகள் தப்பிக்கும். இதுகுறித்து பள்ளிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை