தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1.06 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் வரும், 28ல் நடக்கிறது. இதற்கு, 27ல் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் சேருவதற்கான, பொது கவுன்சிலிங், 21ல் முடிந்தது. இதன்முடிவில், 84 ஆயிரத்து, 352 இடங்களே நிரம்பின. ஒரு லட்சத்து, 1,318 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங், ஜூலை, 28ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, 27ம் தேதி காலை, 9:00 மணி முதல், 5:30 மணி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
அறிவுறுத்தல் : பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், ஏற்கனவே கவுன்சிலிங்கில் பங்கேற்று, இட ஒதுக்கீடு பெற்றவர்களும் இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் செயலர் இந்துமதி அறிவித்துள்ளார். கூடுதல் விவரங்களை, https://www.annauniv.edu/tnea2016/ என்ற, இணைய தளத்தில் காணலாம்.
அருந்ததியர் ஒதுக்கீட்டுக்கு 29ல் நடக்கிறது : கடந்த ஜூன், 23ல் துவங்கி, இம்மாதம், 21ம் தேதியுடன் முடிவடைந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், அருந்ததியருக்கான ஒதுக்கீட்டில், 4,762 இடங்களும், தொழிற்கல்விக்கான கவுன்சிலிங்கில், 189 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை, ஆதிதிராவிடர் எனப்படும், பட்டியலின தலித் மாணவர்களுக்கு நிரப்புவதற்கான கவுன்சிலிங், 29ல் நடக்கிறது. கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்து பாடம் எடுக்காதோர், விண்ணப்பித்து வேறு பாடப்பிரிவுகளில் ஒதுக்கீட்டு பெற்றோரும், நேரில் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று, விருப்பமான கல்லுாரிகளில், முக்கிய பாடப்பிரிவுகளில் இடம் இருந்தால் எடுத்து
கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை