சட்டசபையில், ஐந்து ஆண்டுகளில், 110வது விதியின் கீழ் அறிவித்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டு உள்ளார். அவரது அறிக்கை: கைத்தறி, கைத்திறன், துணிநுால் மற்றும் கதர்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகிய மூன்று துறைகளிலும், கடந்த ஐந்தாண்டுகளில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் வருமாறு:
கைத்தறி, கைத்திறன், துணிநுால் மற்றும் கதர்துறை: கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செலுத்தப்படும், மாநில அரசின் பங்கான, நான்கு சதவீதம், எட்டு சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது
மல்பரி நடவு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது
பட்டு ரக துணிகளின் விற்பனைக்கு உச்சவரம்பின்றி, 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது
ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நலத்துறை முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, ஊக்கத்தொகை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
தமிழகத்தில் உள்ள, 76 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கான, கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம், ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, எட்டு மாவட்டங்களில், தலா ஒரு கல்லுாரி விடுதி, பெரம்பலுார் மாவட்டத்தில் இரண்டு விடுதிகள் துவக்கப்பட்டு உள்ளன
சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் பணிகள், மேலும் சிறக்கும் வகையில், 4,500 எக்டேர் பரப்பளவில், மரக்கூழ் தோட்டங்களும், 800 எக்டேர் பரப்பில், உயர் விளைச்சல் ஒட்டு முந்திரி கன்றுகளும், நடவு செய்யப்பட்டு உள்ளன
திருநெல்வேலி மாவட்டத்தில், உயிர் பன்மை செரிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி, 'நெல்லை வன உயிரின வன சரணாலயம்' ஏற்படுத்தப்பட்டு உள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை