எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, பல்வேறு பயிற்சிகளை அளிக்க, தனியார் நிறுவனங்களை, மத்திய அரசு வரவேற்றுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, சுருக்கெழுத்து மற்றும் போட்டி தேர்வுகளுக்கு, தயாராவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, பயிற்சி அளிப்பதற்கான நிறுவனங்களை, மத்திய அரசு, தகுதி அடிப்படையில் தேர்வு செய்து வருகிறது. பயற்சி பெற்ற ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், இடவசதி உள்ள நிறுவனங்கள் மட்டுமே, இதில் பங்கேற்க முடியும்.
தேர்வு செய்யப்படும் பயற்சி நிறுவனங்கள், மாணவர்களுக்கு பொது அறிவு, ஆங்கிலம், கணிதத் திறன், சுருக்கெழுத்து, அடிப்படை கணினி பயிற்சிகளை வழங்க வேண்டும். ஒரு மாணவரின் பயிற்சிக்கு, 800 ரூபாய் வீதம், மத்திய அரசு நிதி வழங்கும்.
விருப்பமுள்ள பயற்சி நிறுவனங்கள், சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., பயிற்சி நிறுவனத்தில், இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். 'மேலும் விவரங்களுக்கு, 044 - 2461 5112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்து உள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை