ஆதரவற்ற ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இல்லம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாய் தந்தையை இழந்து தவிக்கும் ஏழை மாணவர்கள் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் தங்கி படிக்கலாம்.
உணவு, தங்குமிடம் இலவசம்.5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 6-ஆம் வகுப்பிலும் (தமிழ் வழி), 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பில் முதலாண்டிலும் சேர்ந்து படிக்கலாம். இலவசக் கல்வி பெற செயலர், ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், எண்.66, சர்.பி.எஸ்.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியிலும், 044- 24990264, 42107550 என்ற முகவரியிலும், office@rkmshome.org என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை