பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள், தேர்வு அறைக்குள் காலணிகள் மற்றும் பெல்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், பல மாணவர்கள், 'தொள தொள' உடையுடன் அவதிப்படுகின்றனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தேர்வு அறைக்குள் மாணவ, மாணவியர் எப்படி வர வேண்டும் என, தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு, தேர்வுத் துறையால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
'கண்காணிப்பாளர்கள், தேர்வு அறையின் நுழைவாயிலில் நின்று தேர்வர்களின் நுழைவு சீட்டை சரிபார்க்க வேண்டும். அவர்கள் காலணி, பெல்ட் போன்றவற்றை வெளியில் வைத்து விட்டு, அவரவர் இருக்கையில் அமர செய்ய வேண்டும்' என, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், மாணவ, மாணவியரை பெல்ட், 'ஷூ', சாக்ஸ் மற்றும் காலணிகளை கழற்றி விட்டு வர, ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். பல மாணவர்கள், பெல்ட்டை கழற்ற வெட்கப்படுகின்றனர். பெல்ட்டை கழற்றினால், உடைகள் தொள தொளவென, இடுப்புக்கு கீழே இறங்கும் நிலை உள்ளது.
பல மாணவர்கள், முன்னர் குண்டாக இருந்த போது தைத்த உடைகள் தற்போது மெலிந்த நிலையில் பெரிதாகி விட்டது. ஆனால், கண்டிப்பாக பெல்டை கழற்ற ஆசிரியர்கள் நிர்ப்பந்தப்படுத்துவதால், தேர்வையும் எழுத முடியாமல், உடை கீழே இறங்கி விடுமோ என்ற பயத்திலும் அவதிப்படுகின்றனர்.
தனி மனித உரிமை பறிப்பு:
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது: தேர்வு அறையில், போதிய மின் விசிறி வசதி இல்லை. போதிய வெளிச்சமில்லாத வகுப்பறைகள் தேர்வு அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்படி உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தாமல், 'காலணியை கழற்று; பெல்டை வெளியே போடு' என, ஆசிரியர்கள் தொல்லை செய்கின்றனர்.ஆசிரியர்களிடம் கேட்டால், தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்க சொல்கின்றனர். ஆடை அணிவது தொடர்பான தனி மனித உரிமை மற்றும் ஒழுக்க பண்புகளை பறித்து, தேர்வு அறையில் கட்டுப்பாடு விதிப்பது அதிர்ச்சிகரமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை