வரும் கல்வி ஆண்டுக்கு தேவையான பாடப்புத்தகம், நோட்டுகள் குறித்து தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பட்டியல் அனுப்பியுள்ளது.பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்படுகிறது. இதேபோல் வரும் கல்வி ஆண்டிலும் வழங்கப்பட உள்ளது.
இதற்கு தேவையான பாடப்புத்தகம், நோட்டுகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பி உள்ளது. இதன்படி 6 முதல் 8ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுப்பாகவும், மற்ற பாடங்கள் ஒரு தொகுப்பாகவும் முதல் பருவத்துக்கு மட்டும் வழங்கப்படும். 9 ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுப்பாகவும், கணிதம் ஒரு தொகுப்பு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மற்றொரு தொகுப்பாக வழங்கப்படும்.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அனைத்து பாடப்புத்தகங்களும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை