கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் ஹாஜா தமீம், தாம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர். இவரது 12 வயது மகன், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம், 7ம் வகுப்பு ஆசிரியர், தேர்வு பணிக்காக சென்று விட்டதால், 6ம் வகுப்பு ஆசிரியர் குணசேகரன் தற்காலிகமாக 7ம் வகுப்பை கவனித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, ஹாஜா தமீம் மகனிடம் ‘வகுப்பை சிறிது நேரம் கவனித்துக்கொள், நான் மற்ற வகுப்புக்கு பாடம் நடத்திவிட்டு வருகிறேன்,’ என ஆசிரியர் குணசேகரன் கூறிவிட்டு சென்றுள்ளார். வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், மாணவர்கள் கூச்சலிட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த குணசேகரன், 7ம் வகுப்புக்கு வந்து மாணவர்களை கண்டித்ததுடன், வகுப்பை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றும், மாணவர்கள் சத்தம்போடுவதை தடுக்கவில்லையே என கேட்டு மேற்கண்ட மாணவனை சரமாரியாக அடித்தாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற சிறுவன் அழுது கொண்டே இருந்துள்ளான். அவனிடம், பெற்றோர்கள் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறியுள்ளான். உடனே, மகனை அழைத்து கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை மாணவனின் உறவினர்கள், பொது நல அமைப்புகள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, புகாரை மனுவாக கொடுத்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன், என தலைமை ஆசிரியர் கூறினார். இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஆசிரியர் குணசேகரன் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவன், வகுப்பில் இருந்த மாணவர்களிடம் விசாரணை நடந்தது. பின்னர், ஆசிரியர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து, தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை