தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஒரு அரசுப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தை துவக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி பங்கேற்றனர்.உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜாபய் கூறியதாவது:
மாற்றுத்திறன் மாணவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து படிக்கும் விதத்தில் மாவட்டங்கள் தோறும் தலா ஒரு ஒருங்கிணைந்த மாற்றுத்திறன் மாணவர்களின் கல்வி மையம் துவங்கப்பட உள்ளது. இதுதவிர கற்பித்தல் பணிகளில் அவர்களுக்கு உள்ள குறைபாடுகளை தவிர்க்க உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. மாற்றுத்திறன் மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்து அதில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி மையம் அமைய உள்ளது. முதற்கட்டமாக திண்டுக்கல் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மையம் அமைய உள்ளது, என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை