Thursday, December 31, 2015
வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இன்றே கடைசி நாள்
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக இன்றே கடைசி (டிச.31) தேதி ஆகும்.கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்துக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
குடும்ப அட்டைக்கு (RATION CARD) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள்
1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS – 2015
College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS – 2015
Notification No. 01 /2015
Date: 30.12.2015
NOTIFICATION
This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – I Examination conducted in 2012 and 2013 found in that Merit List.
|
Wednesday, December 30, 2015
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்
1. Thiruvallur Collector 9444132000
044 27661600 27662233 27662299
2. Chennai 9445419966 9444131000
044 25381330 25383962 25228025 25234403 42112110 25228025
3. Kancheepuram Collector 9444134000
044 27237433 27238478 27238477
4. Vellore Collector 9444135000
0416 2252345 2252501 2222000 2253034 2228029
5. Krishnagiri Collector 9444162000
04343 239500 239400 239100 239300
மகப்பேறு விடுமுறை 26 வாரம்?-மத்திய அரசு
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது.
பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மழை-வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களிலுள்ள பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை
கெஜட்டட் அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு 2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
10ம் வகுப்பு தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத விரும்புவோர் டிசம்பரம் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
Tuesday, December 29, 2015
தமிழ் நாட்டில் 01.04.2003 க்குமுன் நியமனம்செய்யப்பட்டு01.04.2003க்குப்பின்நிரந்தரம் செய்துபணிவரன்முறைசெய்யப்பட்டஅரசுஊழியர்களில் ஓய்வுபெற்றமற்றும்மரணம்அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்அடிப்படையில் பழையஓய்வூதிய திட்டப்படிஓய்வூதியம் ,பணிக்கொடை., கம்முடேஷன்மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

பொது தேர்வு தேதி வெளியாவதில் இழுபறி
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் ஏற்பட்ட, மழை வெள்ள பாதிப்பால், பொதுத் தேர்வை தள்ளிப் போடலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், கல்வி ஆண்டின் இறுதியில், சட்டசபை தேர்தல் வர உள்ளதால், தேர்வுகளை விரைவில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறையும், தேர்வுத்துறையும் இணைந்து, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை தயாரித்தன. ஆனால், அந்த கோப்பு, அரசு அனுமதிக்காக பல நாட்களாக கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், தேதி அறிவிப்பு தாமதம் ஆகியுள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு
தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான முக்கிய விடைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
உதவி பொறியாளர் பணியிடம்நிரப்ப மின் வாரியம் அறிவிப்பு
மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட, 1,650 பணியிடங்களை நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உதவி பொறியாளர் - எலக்ட்ரிகல், 300; மெக்கானிக்கல், 25; சிவில், 50 என மொத்தம், 375 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் வெளியிட்டு உள்ளது.
பேராசிரியர் நியமனம் யு.ஜி.சி., அறிவுரை
'பல்கலை விதிகளை மீறாமல், தகுதியான பேராசிரியர்களை நியமித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்' என, பல்கலை மானிய குழு - யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா பல்கலையில், அவர் அளித்த பேட்டி:
'நெட்' தேர்வில் கெடுபிடி
நாடு முழுவதும், நேற்று முன்தினம் நடந்த பேராசிரியர்களுக்கான, 'நெட்' தகுதித் தேர்வில், தேர்வு அடிப்படை பொருளான பேனா, பென்சில் உட்பட எந்த பொருளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பேராசிரியர் பணிக்கான, இந்த ஆண்டின், இரண்டாவது, நெட் தேர்வு, நாடு முழுவதும், 89 இடங்களில் நடந்தது. அதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்;
மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி, நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.
ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம்: மானிய 'சிலிண்டர்' ரத்து
ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உடையவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில், ரூ. 419.26க்கு தற்போது வழங்கப்படுகின்றன. அதன் சந்தை விலை ரூ.608 ஆகும்.
Monday, December 28, 2015
ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்
அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்ைல. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது.
3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுடில்லி: மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்
பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடும் மாணவர்களை கண்டறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த, டில்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
Sunday, December 27, 2015
World Days
- January -1 Global Family Day
- January -9 NRI Day
- January -10 World Laughter Day
- January -12 National Youth Day
- January -15 Army Day
'திங்கள், வெள்ளியில் 9 விடுமுறை நாட்கள்'
தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில், 9 நாள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், சொந்த ஊர் அல்லாத வெளிமாவட்டங்களில் பணிபுரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும், 2016ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 23 நாட்கள் இடம் பெற்றுள்ளன.
கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தம் செய்ய, பகுதி நேர பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும், 27 ஆயிரத்து, 700 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 7, 247 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், அனைத்து பள்ளிகளிலும், பல்வேறு திட்டங்களில், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு
நாடு முழுவதும் அரசின் உதவிகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், ‘ஆதார் எண் கட்டாயமல்ல’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும், மத்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வந்தது.
தொழிற்சாலைகள் மிகவும் குறைவாக இருப்பதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பைவிட படித்தவர்கள் அதிகம்
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களில் 90 சதவீதம்பேர் படித்தவர்கள் என்ற அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மக்கள் தொகையான 7.21 கோடியில் 4.5 சதவீதம்பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர்.
'நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு
இன்று நடக்கும் கல்லுாரி உதவிப்பேராசிரியர் பதவிக்கான 'நெட்' தகுதிதேர்வில் 'பேனா, கடிகாரம்' போன்றவற்றுடன் பங்கேற்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) தடை விதித்துள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) வழிகாட்டுதலில் தேசிய தகுதி தேர்வை (நெட் தேர்வு) இன்று டிச.,27ல் நாடு முழுவதும் நடத்துகிறது.
'இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதற்கும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், 6,293 மாணவ, மாணவியருக்கு, உதவித்தொகையாக தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
15 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளின் கதி என்ன?
சட்ட அங்கீகாரம் இல்லாமல் செயல்படும், 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில், 1923ல், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் உருவானது. இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை கட்டுப்பாட்டில், 44 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்கின. கல்லுாரி படிப்புக்கு இணையாக, பி.யூ.சி., படிப்பும் நடத்தப்பட்டது.
Saturday, December 26, 2015
ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு
தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஜன., 18 முதல், இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள், ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
பசங்க 2 - அனைத்து பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் திரையிட வேண்டிய படம்
நண்பர்களே இன்று பசங்க 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன். உளவியல், உடலியல், பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விசயங்கள்,தாயாக வேண்டியவர் நடந்துகொள்ள வேண்டிய தகவல்கள், கணவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள், இன்றைய காலகட்டத்தில் கணவரும்,மனைவியும் எவ்வாறு வாழக்கை வாழ்கிறார்கள் , பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுப்பது,கற்றலில் அதீத திறமை உடைய மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது உட்பட சமுகத்தின் பல்வேறு தகவல்களை புட்டு, புட்டு வைக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் ஊர்திப்படி மாவட்ட அலுவலர்களுக்கு அதிகாரம்
தாமதத்தை தவிர்க்க மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி வழங்கும் அதிகாரத்தை துறைத்தலைவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலர்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊர்திப்படி வழங்கப்படுகிறது.
பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு பிஎட் படிப்பை சேர்க்க, 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
'ஆன்-லைனில்' துறைத்தேர்வு -மத்திய அரசு முடிவு
அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நெட்' தகுதி தேர்வு நாளை!
கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, நாடு முழுவதும், நாளை நடக்கிறது; தமிழகத்தில், 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையெனில் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். பெரும்பாலானோர், 'நெட்' தேர்வையே எழுதுவர். ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை இந்த தேர்வு நடக்கும். இந்த ஆண்டுக்கான, இரண்டாவது, 'நெட்' தேர்வு, நாளை நடக்க உள்ளது.
அரசு கல்லூரிகளில்மீண்டும் சிறப்பு வகுப்பு
அரசு கல்லுாரிகளில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, மீண்டும் நடத்த உயர் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர்கள், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் பின் தங்கியிருப்பதை, பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., கண்டறிந்தது.
விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி 2–ந்தேதி வினியோகம்
1–வது முதல் 9–வது வரை பள்ளிக்கூடங்களில் படிக்கும் 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி மாதம் 2–ந்தேதி வழங்கப்பட உள்ளன. விலை இல்லா பாடப்புத்தகங்கள் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.
Friday, December 25, 2015
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
வங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு: மன உளைச்சலில் தேர்வர்கள்
தமிழகத்தில் வங்கி தேர்வு பணியாளர் மையம் (ஐ.பி.பி.எஸ்.,) நடத்தும் மெயின் தேர்வுக்கான மையங்கள் அனைத்தும் வட மாவட்டங்களில் அமைக்கப்பட்டதால் தென் மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைந்து ஐ.பி.பி.எஸ். (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) என்ற கூட்டமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் போட்டி தேர்வு நடத்தி, அனைத்து வங்கிகளுக்கும் தேவைப்படும் கிளர்க்குகளை தேர்வு செய்கின்றன.
யாருக்கு வாக்களித்தோம் உடனே தெரிந்து கொள்ளலாம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு
தமிழகத்தில் 2016 சட்டசபைத் தேர்தலில் 'யாருக்கு வாக்களித் தோம்,' என்பதை வாக்காளர்கள் உடனே தெரிந்து கொள்வதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில மாற்றங்களை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
Thursday, December 24, 2015
மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு
அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது;
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன.
பள்ளிகளுக்கு மாறியது விடுமுறை சத்துணவில் முட்டை 'போச்சு'
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. முட்டைகள் வினியோகிக்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனம், எந்தெந்த நாளில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என ஒரு மாதத்திற்கு முன்பே தேவைபட்டியல் தயாரித்து அனுப்பிவிடும்.
Wednesday, December 23, 2015
•RTI-. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.2. உதவி தலைமையாசிரியருக்கு வாரத்திற்கு 14 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.இணைப்பு நகல்.!
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
1. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
2. உதவி தலைமையாசிரியருக்கு வாரத்திற்கு 14 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இணைப்பு நகல்!!
அன்பாசிரியர் கிருஷ்ணவேணி: அரசுப் பள்ளிக்காக கடன் வாங்கி கல்வி புகட்டும் ஆசிரியை!
ஆசிரியர் ஒரு நல்ல மாணவரை உருவாக்குகிறார்; அவர் நூறு மாணவர்களை உருவாக்குகிறார்.
1986-ம் ஆண்டு. அரசுப் பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பில் 427 மதிப்பெண்கள் பெற்று, மேலே படிக்காமல் வீட்டில் இருந்தார் மாணவி கிருஷ்ணவேணி. அப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக அவரின் வீட்டுக்கு வந்தார் ஓர் ஆசிரியர். 'இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று ஏன் படிக்கவில்லை?' என்று கேட்க, வசதியில்லை என்றார் கிருஷ்ணவேணி. உடனே படிப்பதற்கு பணம் கட்டி, உடைகள் வாங்கிக்கொடுத்து, ஊக்கமும் அளித்தார் அந்த ஆசிரியர்.
பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்கள் நியமிக்க உத்தரவு
அரசு பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாத தால் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதாக புகார் எழுகிறது. இதை தடுக்கும் விதமாக ஊராட்சி ஒன்றிய, அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஊரகவளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை
மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: இன்று வங்கியில் பணம் எடுப்பது நல்லது
வங்கிகளுக்கு நாளை மறுநாள் முதல் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை நாட்கள் வருகிறது. இதனால், ஏடிஎம் சேவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு மாதத்தின் 2வது, 4வது சனிக்கிழமை பொது விடுமுறையாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக மாதத்தின் முதல் மற்றும் 3 வது சனிக்கிழமை முழு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்
குரூப்-1 தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
RTI : தகவல் பெறும் உரிமை சட்டம் கூடுதல் மாற்றங்கள் செய்து உத்தரவு
அரசு அலுவலகங்களில் விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க சில கூடுதல் மாற்றங்களை, அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை ஏற்படுத்தியுள்ளது.
Tuesday, December 22, 2015
Subscribe to:
Posts
(
Atom
)