தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கு, 29ம் தேதி, எழுத்துத்தேர்வு நடக்கிறது.தமிழக போலீசில், போலீசாருக்கு உறுதுணையாக செயல்பட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறப்பு காவல் இளைஞர் படையினர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள், தங்களை போலீசாராக அறிவிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து, சில மாதத்திற்கு முன், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.இந்நிலையில், தமிழகம் முழுவதும், 29ம் தேதி, சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கான எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அதற்கான நுழைவுச்சீட்டு, இளைஞர் படையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.தேர்வில் வெற்றி பெறுபவர்கள், தமிழக போலீசாராக மாற்றப்படுவர் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை