Ad Code

Responsive Advertisement

கல்விக்கு அனைத்து உதவியும் செய்யப்படும்: அமைச்சர் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் விசுவநாதன் பேசியதாவது:ஒரு சமுதாயம், நாடு முன்னேற கல்வியே அடித்தளம். இதற்கான விதையை பள்ளியில் விதைத்தால் தான் நோக்கம் நிறைவேறும் என்பதற்காக அரசு 14 வகை உபகரணங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.


இனி நோட்டு புத்தகமும் இலவசமாக கிடைக்கும். இவை தவிர பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளியில் படிக்க வைக்க வேறு எந்த பொருளாவது கடையில் பணம் தந்து வாங்க வேண்டியிருக்கிறது என்றால், அதுபற்றி தெரிவிக்கலாம். இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, அதையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உணவு, உடை, இருப்பிடம் போன்று,நவீன கால மாற்றத்திற்கேற்ப கம்ப்யூட்டர் பயன்பாடும் மாறியுள்ளது என்றார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement