மத்திய அரசின், தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், ஜன., 12ம் தேதி, விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக நலன் மற்றும் தேச வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு செயல்படும், தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, தனி நபர் சேவையில், ரத்த தானம், சமூக சேவை உட்பட சமுதாயம் சார்ந்த பணிகளில் சிறப்பாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும், 25 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பதக்கம் மற்றும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது.கடந்தாண்டு வரை, இந்த விருதுகளை பெறும் தனி நபருக்கான வயது வரம்பு, 13 முதல் 35 வரை இருந்தது.
நடப்பாண்டு, வயது வரம்பு, 15 முதல் 29 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தன்னார்வ இளைஞர் அமைப்பைச் சேர்ந்த சிலர் கூறுகையில், 'நடப்பாண்டு, தேசிய இளைஞர் விருது பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, 5ம் தேதி கடைசி நாள் என்ற அறிவிப்பு, அதற்கு இரண்டு நாள் முன்னர்தான் வெளியிடப்பட்டது. இதனால் தகுதியிருந்தும், பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை' என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை