ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரில், பள்ளி ஆசிரியரின் இடமாறுதலை கண்டித்து, 8 நாட்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு கிராம இளைஞர்கள் கோயில் மரத்தடியில் பாடம் நடத்துகின்றனர்.
அவர்களது குழந்தைகளுக்கு வி.சுப்பிரமணியபுரத்தில் உள்ள கோயில் மரத்தடியில், கிராம இளைஞர்கள் பாடம் சொல்லி கொடுத்து வருகிறார்கள். இதனால் மாணவர்கள் இன்றி பள்ளி வகுப்பறைகள் வெறிச்சோடி கிடக்கிறது.
இதுகுறித்து அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜலட்சுமி கூறுகையில், முதுகுளத்தூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பாமல், அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி பயிலலாம் என, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் உறுதியளித்ததால், மாணவர்கள் ஆரம்ப கல்விக்காக வெளியூர்களுக்கு செல்லக்கூடாது என கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். ஆனால், தற்போது ஆசிரியர் பற்றாக் குறையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கடந்த 8 நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகிறோம், என்றார்.
கிராம தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,நிரந்தர பணி யிடத்தில் ஆசிரியரை நியமிக்காமல், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனம் காட்டுவதால், இனி வரும் காலங்களில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறையும் அபாயம் உள்ளது. நிரந்தர பணியிடத்தில் ஆசிரியரை நியமிக்கக்கோரி, கலெக்டரிடம் முறையீடு செய்தும் நடவடிக்கை இல்லை, என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை