Ad Code

Responsive Advertisement

அஞ்சல் துறையில் 143 தபால்காரர் பணியிடம் காலி

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 143 தபால்காரர்கள் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அஞ்சல் துறையில் 142 தபால்காரர்கள் உட்பட 143 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த 10ம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 27 வயது வரை.

மாற்றுத்திறனாளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. எழுத்து ேதர்வு உண்டு. விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய். தேர்வுக் கட்டணம் 400 ரூபாய். மாற்றத்திறனாளிகளுக்கு, எஸ்சி/எஸ்டி பிரிவினர்  தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.  விண்ணப்பங்கள்  இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.  மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்பிக்கவும் www.dopchennai.in  என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பங்களை  04-10-2015ம் தேதி இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement