கல்வியியல் கல்லுாரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2015--16 முதல் யோகா பாடத்தை தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கட்டாயமாக்கி உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் யோகா கற்று கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு கற்று கொடுக்க முதலில் ஆசிரியர்கள் யோகா தெரிந்திருக்க வேண்டும்.
ஓராண்டிற்கு 32 மணி நேரம் செயல்முறை பயிற்சியும், 16 மணி நேரம் 'தியரி'யும் உள்ள வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குனர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.காந்திகிராம பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் ஜாகிதாபேகம் கூறியதாவது: பெங்களூருவில் நடந்த தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கூட்டத்தில் யோகா பாடத்தை செயல்படுத்துவது குறித்து கல்லுாரி முதல்வர்கள், பல்கலை துறைத்தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. யோகா பாடத்திற்கு தினமும் ஒரு பாடவேளை ஒதுக்கப்படும், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை